நடிகைகள் கருப்பு வெள்ளை புகைப்படங்களை பதிவிட காரணம் இதானா. ஆண்ட்ரியா கொடுத்த விளக்கம்.

0
674
andrea
- Advertisement -

சமூகவலைத்தளங்களில் அப்போது ஒரு சில சேலஞ்ச் ட்ரெண்டிங் ஆவது வழக்கமான ஒரு விடயம் தான். அதுபோன்ற நாம் பலவகையான சேலஞ்ச் செய்திகளை இதுவரை பார்த்திருப்போம். அதில் குறிப்பிடத்தக்கது கீ-கீ சேலஞ்ச், ஐஸ் பக்கெட்  சேலஞ்ச், காக்ரோச் சேலஞ்ச் என்று பல்வேறு சேலஜ் அடிக்கடி பல்வேறு சேலஞ்கள் வைரலானது. இதை பொது மக்கள் மத்தியில் பிரபலமாக முக்கிய காரணம் என்று பார்த்தால் சினிமா பிரபலங்களாக தான் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது கொரோனா சமயத்தில் பல்வேறு சேலஞ்கள் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

இதுபோன்ற சேலஞ்ச்களை பிரபலங்கள் மற்றும் இணையவாசிகள் செய்து அதை வீடியோவாகவோ அல்லது புகைப்படமாகவோ எடுத்து இணைவைத்தல் பதி விடுவார்கள். மேலும் அதனை தங்களது நண்பர்பர்களுக்கும் அனுப்பி செய்ய சேலஞ்ச் செய்வார்கள். அதிலும் தற்போது கொரோனா சமயத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து பொழுதை போக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

- Advertisement -

டீ -ஷர்ட் வியர் சேலஞ் மற்றும் பில்லோ வியர் சேலஞ் என்று இரண்டு சேலஞ்கள் வைரலாகி வந்தது. அதை நடிகைகள் அனைவரும் செய்தனர். இந்த நிலையில் தற்போது WomenSupportingWomen என்ற ஹேஷ் டேக் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் நடிகைகள் ஒருவருக்கு ஒருவர் சேலஞ் செய்து கருப்பு வெள்ளை புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், இதை மற்ற நடிகைகளையும் டேக் செய்து வருகின்றனர்.

ஆனால், இந்த சேலஞ் எதற்கு? எதற்காக இப்படி கருப்பு வெள்ளை புகைப்படங்களை பதவிடுகிறார்கள் என்று பலரும் குழம்பியுள்ள நிலையில் நடிகை ஆண்ட்ரியா இதற்கு பதில் அளித்துள்ளார். அதாவது, பெண்களுக்கு ஆதரவாக பெண்கள் இருக்கவும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிறுத்தவும், பெண்களை சமமாக நடத்தவும் தான் இந்த சேலஞ்ஜின் நோக்கமாம்.

-விளம்பரம்-
Advertisement