ஷூட்டிங்கில் முளைத்த காதல், வயிற்றிலேயே இறந்த குழந்தை – அங்காடி தெரு சோபியாவின் கண்ணீர் கதை

0
641
- Advertisement -

வயிற்றில் குழந்தை இறந்தே பிறந்தது என்று வேதனையில் அங்காடித்தெரு பட நடிகை அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அங்காடித்தெரு. இந்த படத்தில் மகேஷ், அஞ்சலி, வெங்கடேஷ், பாண்டி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை கருணாமூர்த்தி, அருண்பாண்டியன் அவர்கள் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி, ஜீவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இன்னும் இவர்களை ரசிகர்கள் ஞாபகம் வைத்து தான் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த படத்தில் சோபியா கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை சுகுணா நாகராஜன்.

- Advertisement -

அங்காடித்தெரு படம்:

இவர் அங்காடித்தெரு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி இருந்த நாகராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் நடிகையும் மட்டுமில்லாமல் தற்போது பியூட்டி பார்லர் ஒன்றை வைத்து இருக்கிறார். அதன் உரிமையாளராகவும் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் சுகுணா அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், நான் அழகாக இல்லை என்பது பல நேரங்களில் நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறேன். எல்லா பையன்களும் என்னுடைய அன்னிக்கு பின்னால் தான் இருப்பார்கள். எனக்கு பின்னால் ஒரு நபர் கூட இல்லை. இதை நினைத்து நான் வருத்த படுத்தப்பட்டு இருக்கிறேன்.

சுகுணா அளித்த பேட்டி:

எங்காவது செல்ல வேண்டும் என்று நினைத்தால் என்னுடைய அண்ணி என்னை ஒதுக்கி வைத்து விட்டு திட்டம் போடுவார்கள். என்னை எதிலும் கலந்து கொள்ள மாட்டார்கள். நான் அழகாக இல்லை என்ற காரணத்தினால் தான் அவர்கள் என்னை ஒதுக்கி வைத்தார்கள். ஆனால், இந்த பிரச்சனை என்னுடைய கணவர் வந்த பிறகு மாறிவிட்டது. என்னுடைய வாழ்க்கையில் ஒரு தெய்வமாக அவரை நான் பார்க்கிறேன். நான் சேலை அணிவது அவருக்கு ரொம்ப பிடிக்கும். என் கணவரை போல ஒரு நல்ல மனிதரை நான் சந்தித்ததே இல்லை.

-விளம்பரம்-

இறந்து பிறந்த குழந்தை:

எனக்கு அவர் மீது காதல் வர காரணம் அங்காடித்தெரு படப்பிடிப்பின் போது தான். முதலில் எனக்கு அவர் மீது கோபம் வந்தது. நாட்கள் செல்ல செல்ல தான் அவருடைய நல்ல மனது புரிந்தது. அவர் ரொம்ப நேர்மையானவர். நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நான் கர்ப்பமான எட்டாவது மாதத்தில் கருக்கலைப்பு செய்து விட்டேன். காரணம், குழந்தை வயிற்றில் இறந்து விட்டது. இது எனக்கே தெரியாது. மூன்று நாட்கள் கழித்து மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போதுதான் மருத்துவர்கள் சொன்னார்கள்.

சுகுணா கனவு குறித்து சொன்னது:

என் குழந்தை இறந்து பிறந்ததை அனைவருமே காட்ட வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், என்னுடைய கணவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவளிடம் காட்டவில்லை என்றால் அவள் ரொம்ப வருத்தப்படுவாள். அவளிடம் காட்டுங்கள் அதற்குப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று அந்த பிரச்சினையை என் கணவர் எளிதாக கையாண்டார். அதற்குப்பின் மகன் பிறந்தான். பின் நான் ஒப்பனை வகுப்புகளில் சேர்ந்தேன். அதன் மூலம் என்னுடைய கனவுகள் நினைவாகியது என்று கூறியிருந்தார்.

Advertisement