கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசியது தொடர்பாக செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தையே கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்த சம்பவம் தான் உலுக்கிக் கொண்டிருக்கின்றது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 40 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
"காப்பாத்து தலைவா காப்பாத்து.." காலில் விழுந்து கதறிய பெண்! EMOTIONAL ஆன விஜய்#Kallakurichi #Kallakurichihooch #KallakurichiTragedy #KallakkurichiDeath #KallakurichiIssue #SpuriousLiquor #Vijay #TVKVijay #NewsTamil24x7 pic.twitter.com/Ghy8jnR9w1
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) June 21, 2024
சில பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பல பேர் வாந்தி, மயக்கம், தலைவலி, வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலுமே, மருத்துவர்கள் பல பேர் இறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். அதில் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் தான் இந்த உயிரிழப்பிற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்திருக்கிறது.
கள்ளக்குறிச்சி சம்பவம்:
மேலும், காவல்துறை பொறுப்பு இல்லாமல் இருந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. இதனால் பத்துக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்கிறார். பின் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
அப்படியே நெஞ்சில் குண்டு பாய்ந்த அவர்களுக்கு எதற்கு பத்து லட்சம் என்றும். இளையவர் உதயநிதி ஏன் அங்கு சென்றார் எனவும் கேட்கவும் #anithasampath https://t.co/dzuXPtE9Sw
— pradeep kumar (@prakash67385811) June 21, 2024
விஜய் பதிவு:
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பிரபலங்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அவர்கள் தமிழக அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறும் வகையில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி மிகுந்த அதிர்சியையும், மன வேதனையையும் அளிக்கிறது.
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சொன்னது:
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
#AnithaSampath 🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/H9AcZPuZos
— GOVIND SAMY 🤍💙TVK🤍💙 (@govindsamy1) June 20, 2024
அனிதா பதிவு:
இதை தொடர்ந்து நேற்று மாலை நடிகர் விஜய் அவர்கள் கள்ளச்சாராயத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து பாதிக்கப்பட்டவர்கள் உடைய உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நடிகையும், செய்தி வாசிப்பார் அனிதா சம்பத் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், நாட்டுக்காக போராட பார்டருக்கு போனப்ப தீவிரவாதிகளிடம் நேருக்கு நேர் தாக்கும் போது நெஞ்சில குண்டு பட்டு ஹாஸ்பிடல்ல கவலைக்கிடமா இருக்காங்க, பாவம் என்று பதிவிட்டு இருந்தார். இதனை அவர் விஜய்யை குறிப்பிட்டு தான் சொல்கிறார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.