இத பண்ணாம இருந்திருந்தா மட்டும் உங்க அம்மா, மனைவிக்கு மகளீர் தின வாழ்த்த சொல்லுங்க – அனிதா சம்பத்.

0
645
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

-விளம்பரம்-

அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத் தனது சமூக வளைத்தளத்தில் நபர் ஒருவர் தனக்கு தொடர்ந்து அவதூறாக மெசேஜ் செய்து வருவதாக கூறி அந்த நபரின் புகைப்படத்தை பதிவிடுள்ளார். அனிதா சம்பத் பிக் பாஸுக்கு பின் வெளியேறிய சில நாளில் அவரது தந்தை காலமானார்.

- Advertisement -

அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த அனிதா சமபத் ஒரே சமயத்தில் அப்பாவின் இறப்பு மற்றும் சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியவில்லை என்று மிகவும் வேதனையோடு ஆரியிடம் தெரிவித்து இருந்தார். மேலும், பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்.

அதே போல தன்னை சமூக வலைதளத்தில் திட்டி தீர்த்து வரும் நபர்களின் ஐடி அடிக்கடி தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் அனிதா சம்பத். இப்படி ஒரு நிலையில் மகளீர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் அனிதா. அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.

-விளம்பரம்-

நீங்கள் எந்த ஒரு பெண்ணையும் அவதூறாக பேசிய அல்லது சமூக வளைதளத்தில் அவதூறாக எழுதாமல் இருந்திருந்தால் மட்டுமே உங்களின் அம்மா சகோதரி மனைவி மற்றும் காதலிக்கு வாழ்த்து தெரிவியுங்கள். அவர்களுக்கு மனதிலிருந்து வாழ்த்துக்களை தெரிவிப்போம். நீங்கள் போலியான கணக்கில் இருந்து அவதூறாக பேசி இருந்தால் உங்களின் உண்மையான கணக்கில் இருந்து வாழ்த்து சொல்லாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement