ஜெய்யுடன் காதல் முறிந்ததா.! முதன் முறையாக பதிலளித்த நடிகை அஞ்சலி.!

0
1254
Jai-anjali
- Advertisement -

நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும், எங்கேயும் எப்போதும்’என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகப் பேசப்பட்டது. இதை இருவருமே மறுக்கவில்லை. இந் நிலையில் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக வெளியில் சுற்றுவதாகவும், இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் அதிகரித்த நிலையில், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.

-விளம்பரம்-

இது பற்றி ஜெய் ஒரு பேட்டியில் கூறும்போது, ‘நானும், அஞ்சலியும் நெருங்கி பழகுவது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. அதை எப்படி சொல்லவென்று தெரியவில்லை. எனக்கு அஞ்சலியையும் அஞ்சலிக்கு என்னையும் பிடித்திருக்கிறது’ என்று கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும், ’மகளிர் மட்டும்’படத்துக்காக நடந்த தோசை சுடும்போட்டியில் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தங்கள் காதலை உறுதிப்படுத்தினர். அஞ்சலியின் பிறந்த நாளன்று ஜெய் காதல் பொங்க அனுப்பிய வாழ்த்து பரபரப்பைக் கிளப்பியது.

இருவரும் ஒரே வீட்டில் வசித்துவருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது. ’திடீரென்று ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இந்நிலையில் ஜெய்யுடனான காதல் பற்றி நீண்டகாலமாக உலா வரும் இந்த செய்தி பற்றி அஞ்சலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “இது பற்றி நான் எங்குமே பேசியதில்லையே. அவர்களாக எழுதுகிறார்கள். பின்னர் அவர்களே நிறுத்திவிட்டார்கள்” என பதில் அளித்துள்ளார். இருப்பினும் ஜெய்யுடன் காதல் இல்லை என்று அஞ்சலி கூறவே இல்லை.

Advertisement