ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘அண்ணா’. தன் தங்கைகளுக்காக போராடும் அண்ணனின் கதைதான் இந்த சீரியல். இந்த வாரம் கோவிலில் சண்முகம் தன் வேட்டியை உருவி அசிங்கப்படுத்தியதால் சௌந்தரபாண்டி வீட்டுக்கு கோபமாக செல்கிறார். வீட்டுக்கு வந்த சௌந்தரபாண்டியை பார்த்து இசக்கி சிரிக்க, இதற்கெல்லாம் காரணம் உன் அண்ணன் தான் என்று இசக்கி மீது சௌந்தரபாண்டி, மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்தப் போனார்.
அப்போது சிவபாலன், மாஸாக என்ட்ரி கொடுத்து தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைத்தார். இதனால் சௌந்தரபாண்டியனுக்கும் சிவபாலனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது பாக்கியம் அங்கே வர, இசக்கி கீழே விழுந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின் அவர், சிவபாலனிடம் மண்ணெண்ணையை கொண்டு வரச் சொல்லி நான் சொல்றதை அப்படியே எழுது என சொல்கிறார்.
அண்ணா சீரியல்:
பாக்கியம், என் புருஷனும் அவர் அக்காவும் சேர்ந்து செய்த கொடுமையால் நான் மண்ணெண்ணை ஊத்தி கொளுத்திக் கொண்டேன். அதோடு என் புருஷனையும் அவங்க அக்காவையும் கொளுத்தி விட்டேன் என்று சொல்லி அவர்கள் மீது எண்ணெயை ஊற்ற, சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா அதிர்ச்சி அடைந்தார்கள். பின் நேற்று எபிசோடில், இசக்கி பாக்கியத்திடம் இனிமேல் இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்று சொல்ல, பாக்கியம் அவருக்கு ஆறுதலாக பேசுகிறார்.
நேற்று எபிசோட்:
அதைத்தொடர்ந்து வெங்கடேஷ் ரத்னாவிடம் ஸ்கூலை தனது குழந்தைக்கு எழுதிக் கொடுக்க சொல்கிறார். அதற்கு ரத்னா மறுக்க, வீட்டை விட்டு துரத்தி விடுவேன் என்று மிரட்டுகிறார். இன்னொரு பக்கம், சிவபாலன் அக்காவுக்கு விஷயத்தை சொல்லிவிடலாம் என சொல்ல, பாக்கியம் மறுக்கிறார். அதன்பின் பரணி, சண்முகத்திடம் போட்டியில் ஜெயிக்கணும்னா என் அப்பாவோட வேட்டியை உருவனா மட்டும் போதாது என்று நெருங்க, நான் கந்த சஷ்டி விரதம் என சண்முகம் தள்ளி போகிறார். பின், உன்னை எப்படி வழிக்கு கொண்டு வரேன்னு பாரு என்று பரணி சபதம் எடுக்க, மறுநாள் காலையில் ஷண்முகத்தை கட்டிப்பிடித்தபடி கீழே படுத்து இருக்கிறார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், பரணி வேண்டுமென்றே சண்முகத்தை உசுப்பேற்றுவது போல் நடந்து கொள்கிறார். இதனால் சண்முகம் தனது சஷ்டி விரதத்தில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறார். அடுத்து இசக்கியிடமிருந்து 4 மிஸ்டு கால் வந்து இருக்க, சண்முகம் பதறிப் போய் அவருக்கு போன் செய்கிறார். பின் இசக்கி தனக்கு நடந்த கொடுமையை சொல்ல, சௌந்தரபாண்டியன் வீட்டுக்கு சண்முகம் ஆவேசமாக கிளம்புகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் இசக்கியிடம் தன்னுடன் வீட்டுக்கு வந்துவிடு என்று சண்முகம் அழைக்க, உன் தங்கச்சி வாழா வெட்டியாகி விடுவாள் என சௌந்தர பாண்டியன் நக்கல் அடிக்கிறார். பின் சண்முகம் கோவத்தோடு கிளம்பி அங்கிருந்து வீட்டுக்கு வந்ததும் வைகுண்டம் ஏன்டா இசக்கியை விட்டுட்டு வந்த என கோபப்பட்டு கேட்கிறார். உடனே பரணி, அவன் சரியாகத்தான் செய்திருக்கிறான், ஏன் அவனை ஏத்தி விடுறீங்க என்று சொல்ல, சண்முகம் அமைதியாக நிற்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.