தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அது மட்டுமில்லாமல் சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து முக்கியத்துவம் வருகின்றார். அந்த வகையில் நயன் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி.
இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க சமையலை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்து இருக்கிறார். படத்தில் நடிகை நயன்தாரா பிராமண குடும்ப பெண்ணாக நடித்து இருக்கிறார். இவர் திருச்சியை சேர்ந்தவர். இவருக்கு சின்ன வயதில் இருந்தே உணவை ருசி பார்ப்பதில் நிறைய திறமை இருக்கும்.
அன்னபூரணி படம்:
இதனால் இவரிடம் சமைத்து ருசி பார்க்க சொல்வார்கள். இவருக்கும் சமையல் மீது அதிக ஆர்வம் வந்துவிடும். மேலும், கோயிலில் இவருடைய தந்தை பிரசாதம் சமைப்பவர். இதனால் இவருக்கு அசைவம் பிடிக்காது. பின் நயன்தாரா தன்னுடைய கல்லூரியில் சமையல் கலை நிபுணராக சேர்ந்து கல்வி பயில்கிறார். இவருக்கு இந்தியாவின் தலைசிறந்த சமையல்கலை நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்கான முயற்ச்சியில் ஈடுபடுகிறார்.
படத்தின் கதை:
தன்னுடைய குடும்பத்தின் எதிர்ப்பை மீறி தன்னுடைய லட்சியத்தை நயன்தாரா அடைந்தாரா? இல்லையா? இதற்கிடையில் நயன்தாரா சிக்கல்களை எல்லாம் எப்படி சமாளிக்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் நயன்தாரா வழக்கமான தன்னுடைய நடிப்பை கொடுத்திருக்கிறார். படத்தில் சைவம்- அசைவம் என்ற இரண்டு வகை உணவுகளை இயக்குனர் மையப்படுத்தி கொடுத்து இருக்கிறார். அதில் சில முக்கிய விஷயங்களை காண்பிக்க முயற்சித்து இருக்கிறார். தேவையற்ற நிறைய அரசியல் வசனங்கள் வருகிறது.
ஒரு சமையல் போட்டியை நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஒரு முக்கிய பிரச்சினையாக இயக்குனர் கொண்டு செல்வது கொஞ்சம் கடுப்பேற்றி இருக்கிறது. கதைக்களம் நன்றாக இருந்தாலும் அதை இயக்குனர் கொண்டு சென்ற விதம்தான் சரியில்லை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது. அதோடு சில ஆண்டுகளாக லீட் ரோலில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் படங்கள் எல்லாம் பெரியதாக வரவேற்கப்படவில்லை. அந்த வகையில் அன்னபூரணி படமும் தோல்வியை சந்தித்தது என்றே சொல்லலாம்.
12 கோடி சம்பளம் ஆனா தமிழ்நாடு வசூல் வெறும் 85 லட்சம். கொடுமை. pic.twitter.com/Y3OcWcfNE1
— Nanban (@YourNanban) December 23, 2023
பின் அன்னபூரணி படத்தின் பேட்டியில் கூட நயன்தாரா, என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள் பலருமே திட்டுகிறார்கள். ஏன் என் மீது கோபம் என்று தெரியவில்லை என்றெல்லாம் பேசி இருந்தார். இந்த நிலையில் தற்போது வலைப்பேச்சு குழுவினர், அன்னபூரணி படத்திற்கு நயன்தாராவிற்கு 10 கோடி சம்பளம் கொடுத்தார்கள். பின் அவர் மேக்கப், உடை, பௌன்சர்கள் என்றெல்லாம் ஒரு ரெண்டு கோடி செலவானது. மொத்தம் 12 கோடி ரூபாய் இந்த படத்திற்காக நயன்தாராவுக்கு செலவு செய்திருந்தார்கள். ஆனால், இந்த படத்தினுடைய மொத்த வசூலே 85 லட்சம் என்று கூறப்படுகிறது. இப்படி படத்தின் வசூலை விட ஒரு நடிகையின் சம்பளம் தான் அதிகமாக இருக்கிறது. தற்போது மக்கள் தான் மேலே தூக்குவது போல் தூக்கி கீழே போட்டு விட்டார்கள் என்றெல்லாம் கூறி இருக்கிறார்.