அந்தரங்கம் கிரிஜா ஸ்ரீ சென்னையில் பிறந்து வளரந்தவர். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, அங்கேயே ஒரு பிரபல கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். தன் கல்லூரி காலம் முதலே டீவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆக வேண்டும் என்பது தான் கிரிஜாவின் ஆசையாகும்.
பின்னர் கேப்டன் டீவியில் தொகுப்பாளினி வேலைக்கு ஆள் தேடுவதை அறிந்த கிரிஜா அந்த ஆடிசனில் கலந்துகொண்டார். ஆனால் இவருக்கு கிடைத்ததோ ஏடாகூடமான அந்தரங்கம் நிகழ்ச்சி தான். சரிஎன, வேறு வழியின்றி அந்தரங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார் கிரிஜா.
கல்லூரி படிக்கும் போது தனது தோழிகளுடன் சேர்ந்து இரட்டை அர்த்தத்தில் பேசி விளையாடுவாராம் கிரிஜா. இந்த அனுபவம் அவருக்கு அந்தரங்கம் ஷோவை தொகுத்து வழங்கும் போது உதவி இருக்கிறது.இந்த ஷோவில் சொதப்பினாலும் கூட, இந்த ஷோவினால் தான் கிரிஜா ஸ்ரீ பேமஸ் ஆனார். ஆனால் அந்தரங்கம் ஷோவிற்கு முன்னாள் ஜெயா டிவியில் :தாய் மண்ணின் சாமிகள்’ என்ற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் கிரிஜா ஸ்ரீ.
அதன்பின்னர்,
சமையல் மந்திரம்
அந்தரங்கம்
பள்ளிக்கூடம்
என்றும் இனிமை
நட்சத்திர தீபாவளி, போன்ற பல ஷோக்களை தொகுத்து வழங்கினார்.
தற்போது அந்த ஷோவில் இருந்து விலகிய பின்னர் அவருக்கு வேறு எந்த ஒரு ஷோவையம் தொகுத்து வழங்க அழைப்புகள் வருவதில்லையாம். இதனால் அந்த வீட்டில் முடங்கி கிடக்கும் அவருக்கு, மாப்பிள்ளை பார்க்க துவங்கியுள்ளனர் அவரது வீட்டார். ஆனால், அவருக்கு மாப்பிள்ளையும் கிடைகவில்லையாம். இதனால் சோகத்துடன் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் கிரிஜா ஸ்ரீ.