நடிகை செல்பி எடுக்க அனுமதிக்காததால் ஆத்திரத்தில் ரசிகர்கள் செய்த மோசமான செயல் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மலையாள சினிமா தமிழ் சினிமாவிற்கு பல்வேறு நடிகைகளை அறிமுகம் செய்திருக்கிறது. நயன்தாரா, அசின் துவங்கி சாய் பல்லவி வரை என பல்வேறு மலையாள நடிகைகள் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் அனுபமா பரமேஸ்வரன்.
இவர் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்து இருந்த படம் பிரேமம். இந்த படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தவர் அனுபமா பரமேஸ்வரன். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்து இருந்தது. அதோடு இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்திற்கு பின்னர் நம் அனைவரயும் கவர்ந்தது நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான். மேலும், பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் தனுஷ் நடித்த கொடி என்ற படத்தில் அனுபமா நடித்து இருந்தார்.
தமிழில் அனுபமா நடித்த படங்கள்:
இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தமிழில் கொடி படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் நிறைய படங்களில் பிஸியாக நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மலையாளத்திலும் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுபமா தமிழில் சமீபத்தில் வெளியான தள்ளிப்போகாதே திரைப் படத்தில் நடித்து இருந்தார். அதுவும் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இயக்குனர் ஆர் கண்ணன் இந்த படத்தை இயக்கி இருந்தார்.
அனுபமா திரைப்பயணம்:
தெலுங்கில் பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்த நின்னுக்கோரி திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் தள்ளிப்போகாதே என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இவர் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார். அதனால் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். அதிலும் இந்த லாக் டவுன் சமயத்தில் அனுபமா படு மாடர்ன் உடைகளில் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். சமீபத்தில் அனுபமா நடித்த படம் ரவுடி பாய்ஸ். முற்றிலும் கல்லுரி கதை களத்தை மையமாக கொண்ட படம்.
அனுபமா நடித்த படம்:
இந்த படத்தை இயக்குனர் ஹர்ஷா கொனுகன்டி இயக்கி இருந்தார். மேலும் இந்த கொனுகன்டி வெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரிக்கிற தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஆந்திராவில் ஒரு மெடிக்கல் காலேஜில் படிக்கும் தமிழ் பெண்ணாக அனுபமா நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் நடிகை அனுபாமா செல்பி எடுக்க அனுமதிக்காததால் ஆத்திரத்தில் ரசிகர்கள் மோசமான செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் கடை திறப்பு விழாவிற்கு அனுபமா பரமேஸ்வரன் சென்றிருந்தார்.
ரசிகர்கள் செய்த மோசமான செயல்:
அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கடை திறப்பு விழாவை முடித்துவிட்டு அனுபமா திரும்பும் போது அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் குவிந்தனர். ஆனால், ரசிகர்கள் செல்பி எடுக்க அனுபமா அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் அனுபமா கார் டயரில் உள்ள காற்றை பிடுங்கிவிட்டு இருக்கின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அனுபவமாவை கடை உரிமையாளர்கள் பின்புறமாக வேறொரு காரில் அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தி இருந்தது.