இதனால் தான் சினிமாவில் இத்தனை ஆண்டுகள் பிரேக் எடுத்தேன் – முதன் முறையாக சொன்ன அனுஷ்கா

0
989
- Advertisement -

படங்களில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் இது தான் என்று முதன் முறையாக அனுஷ்கா ஷெட்டி அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகை அனுஷ்கா. இன்றும் ரசிகர்களின் கனவு கன்னியாக அனுஷ்கா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் முதலில் தெலுங்கு திரையுலகில் தான் அறிமுகமாகி இருந்தார்,

-விளம்பரம்-

அதன் பின் தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி பிரபலமானார். அதன் பின்னர் இவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், சினிமாவில் நுழைந்த ஆரம்பகட்டத்தில் நடிகை அனுஷ்கா கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். பின் கதைக்கு ஏற்றவாறு நடிக்க தொடங்கினார். இருந்தாலும், இவரை இந்திய முழுவதும் பிரபலமாக்கியது ‘பாகுபலி’ படம் தான்.

- Advertisement -

அனுஷ்கா திரைப்பயணம்:

இந்த படத்தை ராஜமவுலி இயக்கியிருந்தார். இந்த படத்தில் பாகுபலி பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், ராணா, சத்யராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய வசூல் சாதனையை செய்திருந்தது. அது மட்டும் இல்லாமல் உலகையே திரும்பி பார்க்க வைத்த படம். இந்த படத்தின் மூலம் அனுஷ்கா மக்கள் மத்தியில் தேவசேனாகவே பதித்து விட்டார். அதோடு இந்த படத்தின் மூலம் தான் அனுஷ்கா ஷெட்டிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

இதனை அடுத்து இவர் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த “பாகமதி” என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதோடு அதற்கு பிறகு அனுஷ்கா பெரிதாக படங்கள் எதிலும் நடிக்கவில்லை. அதற்கு காரணம், இவரின் உடல் எடை அதிகரித்தது. அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார். மேலும், எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

-விளம்பரம்-

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டிபடம்:

இதனால் இவர் படங்களிலும் நடிக்கவில்லை. பலருமே அனுஷ்காவிற்கு என்ன ஆனது? என்றும் கேள்விகள் எழுப்பினார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தின் மூலம் அனுஷ்கா கம்பேக் கொடுத்திருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மகேஷ் பாபு இயக்குகிறார். யு வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் நவீன் பொலிஷெட்டி, முரளி சர்மா, நாசர், துளசி, ஜெயசுதா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

அனுஷ்கா அளித்த பேட்டி:

இந்நிலையில் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சியில் அனுஷ்கா கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர், பாகுபலி படத்தை தொடர்ந்து பாகமதி படத்தில் நான் நடித்திருந்தேன். அதன் பிறகு எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொண்டேன். எதிர்கால படங்களுக்கு என்னை தயார் செய்தும் கொண்டேன். அதனால் தான் இந்த இடைவெளி எனக்கு அவசியமானது. அதனால் நான் அந்த இடைவெளியில் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இப்போது தொடர்ந்து கதைகளை கேட்டு வருகிறேன். நல்ல கதைகளாக இருந்தால் எந்த மொழியாக இருந்தாலும் நடிப்பேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement