இளையராஜாவ பார்த்து எல்லோரும் நடுங்க இது தான் காரணம் – ஏ.ஆர்.ரகுமான் சொன்ன பளிச் பதில்

0
154
- Advertisement -

இளையராஜா பற்றி ஏ.ஆர். ரகுமான் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர்
ஏ.ஆர். ரஹ்மான். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்த இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம்.

-விளம்பரம்-

பின்பு பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் சினிமாவில் கால்தடம் பதித்தார்.
தமிழில் இவர் ‘ரோஜா’ படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார்.

- Advertisement -

ரகுமான் குறித்த தகவல்:

இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
தற்போது ஏ.ஆர் ரகுமான் அவர்கள் பிசியாக பல படங்களில் பணியாற்றியும், இசை கச்சேரிகளை நடத்தியும் வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, தமிழ் சினிமாவில் இசையில் தன்னுடைய ஆதிகத்தை செலுத்தியவர் இளையராஜா தான். ஆனால், தன்னுடைய முதல் படத்திலேயே இளையராஜாவின் பெயரை தன்னுடைய இசையால் ஏ.ஆர் ரகுமான் மறக்க செய்தார். நாளடைவில் இளையராஜாவும் ரகுமானும் மோதி கொள்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது.

ரகுமான்-இளையராஜா மோதல்:

இருந்தாலுமே ஏ.ஆர் ரகுமான் தனது இசைக்கு அடித்தளம் போட்டவர் இளையராஜா தான் என்று புகழ்ந்தெல்லாம் பேசி இருக்கிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஏ.ஆர் ரகுமான், இசைக்கலைஞர் என்றால் தண்ணி அடிப்பார், அவன் ட்ரக்ஸ் எடுத்துக் கொள்வான், பொண்ணுங்களோட சுத்துவான், அவனோட கேரக்டரை சரியாக இருக்காது என்று ஒரு கிரியேட் பண்ணி வைத்திருந்தார்கள். சிலபேர் பண்ண விஷயத்தை எல்லோருக்குமே வந்துவிட்டது.

-விளம்பரம்-

ஏ.ஆர்.ரகுமான் பேட்டி:

இதனால் ஒரு இசை கலைஞர், பாடகர்னு சொன்னாலே அய்யோ அந்த பக்கம் எல்லாம் போகாதே. நீ போக வேண்டாம், ஜாக்கிரதியாக இரு என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், இளையராஜா சார் தான் நான் முதலில் பார்த்தேன். அவர் இந்த எண்ணத்தை எல்லாம் உடைத்து ஒரு சாமியார் மாதிரி உட்கார்ந்து இருப்பார். தண்ணி அடிக்க மாட்டார், தம் அடிக்க மாட்டார், அவருக்கு வேறு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. எப்போதுமே மியூசிக் மியூசிக் என்று தான் இருப்பார். அவரோட இசையால் தான் மரியாதை கிடைத்தது. அந்த விஷயம் என்னை ரொம்பவே பாதித்தது.

இளையராஜா பற்றி சொன்னது:

அவர் துப்பாக்கி வைத்து எல்லாம் கூட சுட மாட்டார். அவருடைய கண் பார்த்தாலே எல்லாம் நடுங்கி விடுவார்கள். அவங்க நடுவதற்கு காரணம் அவருடைய குணம். இந்த விஷயம் அவரிடம் இருந்து எனக்கு கிடைத்த பயங்கரமான இன்புளுயன்ஸ். அதுமட்டுமில்லாமல் இளையராஜா சார் தான் என்னை ரொம்ப இன்ஸ்பயர் பண்ண ஆளும். அவர் எங்க இருந்து வந்து எவ்வளவு பெரிய ஆளாக மாறி வருஷம் கடந்தும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதற்கான சரியான நபரும் அவர்தான். இன்னமும் அவருக்கு புது இசை உருவாக்குவதில் நிறைய வேகம் இருக்கிறது. அந்த காதல் பற்றி குறையவே இல்லை. அதற்காக அவருக்கு நாம் எல்லோருமே தலை வணங்கனும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement