ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தன்னுடைய இசை மூலம் உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களை தன்வசப் படுத்தியவர் ஏ.ஆர்.ரகுமான். அவர் தன்னுடைய 25 ஆண்டுகால இசைப்பயணத்தை நிறைவு செய்ததை அடுத்து சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார்.
சினிமா துறையில் இருந்து ரஜினி கமல் என பலர் அரசியலுக்கு வர காரணம் என்ன என்ற கேள்விக்கு அவர், சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்களுக்குள், ஒரு நல்ல தலைமை தமிழகத்திற்கு வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கலாம் என்றார்.
இதையும் படிக்கலாமே:
டிவி தொகுப்பாளரை கலாய்த்த விஜய் ஏன் தெரியுமா ?
ரஜினிகாந்தின் அரசியல் கட்சிக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பீர்களா என்ற கேள்விக்கு அவர், அதை பற்றி பிறகு பேசுவோம் அதெல்லாம் யோசித்து செய்யவேண்டிய செயல் என்றார்.