நயன்தாரா நடித்து இன்று திறைக்கு வந்துள்ள படம் அறம். லேடி சூப்பர் ஸ்டார் என்பதை நிருபித்துள்ளார் நயன்தாரா. படத்தில் சிங்கிலாக தன் நடிப்புதிறத்தின் ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் முக்கிய கேரக்டர்களாக விக்னேஷ், ரமேஷ், சுனு லெட்சுமி, வினோதினி என பலர் நடித்துள்ளனர்.
படத்தின் காஸ்ட் அண்ட் க்ரூ:
கதை, திரைக்கதை, இயக்கம் – கோபி நயினார்
தயாரிப்பு – கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்
இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – ஓம்.பிரகாஷ்
படத்தில் ஒரு தைரியமிக்க மாவட்ட ஆட்சியராக வருகிறார் நயன்தரா. தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் ஒரு வறண்ட கிராமத்தில் உள்ள பிரச்சனைகளை போக்க கடைசி வரை தன்னை ஒரு பிசியான கலெக்டராக வைத்துக்கொள்கிறார் நயன்தாரா.
இறுதியில் அந்த கிராமத்தின் தண்ணீர் பிரச்சனை போக்கி விவசாயிகளுக்கு எப்படி உதவுகிறார் கலெக்டர் என்பது தான் கதை.
படத்தில் வரும் ஒரு சில வசனங்கள் நன்றாக ஸ்கோர் செய்திருக்கின்றன.
‘எப்போ நம்ம தண்ணிய காசு குடுத்து பாட்டில்ல வாங்க ஆரம்பிச்சமோ அப்போவே தண்ணி பஞ்சம் வந்துருச்சு’
இது போன்ற சில நல்ல வசனங்களை வைத்து ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குனர். படம் முழுவதும் நயன்தார ஒரு ஆளுமை மிக்க கம்பீரமான பெண்ணாக வலம் வருகிறார். மொத்தத்தில் படத்தில் உள்ள செய்து மக்களுக்கானது எனலாம்.