90களின் துவக்கத்தில் தமிழ் திரையுலகில் ஹீரோவாக கொடி கட்டி பறந்தவர் அர்ஜுன் சர்ஜா. இவரது முதல்வன் படம் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்து இவரை ஆக்ஷன் கிங் அர்ஜூனாக மாற்றியது. இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மக்கள் அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவின் புரூஸ்லி என்று பெயரெடுத்தவர் நடிகர் அர்ஜுன்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ஆக்ஷன், அதிரடி, தேசப்பற்று பாணியில் இருக்கும். இதனாலே இவருக்கு தேசப்பற்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகம் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். தற்போது அர்ஜுன் அவர்கள் வில்லன், குணச்சித்திர வேடங்களில் மிரட்டி வருகிறார். தற்போது இவர் தமிழ், மலையாள படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
ஆக்சன் கிங் அர்ஜுன் கடந்த 1988ஆம் ஆண்டு கனடா சினிமாவில் பிரபல நடிகையான நிவேதிகா என்பவரை தீருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அர்ஜுன் -நிவேதிகா தம்பதிக்கு ஐஷ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மக்கள் ஐஸ்வர்யா இவர் 2013ஆம் ஆண்டு வெளியான பட்டது யானை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதன் பின்னர் சொல்லி விடவா படத்தின் தெலுங்கு படத்திலும் நடித்தார்.
இவர் தற்போது தன்னுடைய தந்தையை போல தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். மூத்த மகள் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கு இளைய மகள் அஞ்சனா பெண்களுக்கு தேவையான ஹேண்ட்பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். உலகில் பல ஹேண்ட்பேக் தயாரிக்கும் தொழிற்ச்சாலைகள் இருந்தாலும் மற்றவர்க்ளிடம் இருந்து மாறுபட்டு பழங்களின் தோளை பயன்படுத்தி ஹேண்ட்பேக்கை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா.
மேலும் அஞ்சனா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது தன்னுடைய குடும்பத்தின் படங்கள், தன்னுடைய அழகிய புகைப்படங்கள் என பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் சமீபத்திய இவர் நீச்சல் குலத்திற்கு அருகே இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நடிகர் அஜூனுக்கு இவ்வளவு அழகான மகளா என ஆச்சரிய பட்டு வருகின்றனர்.