அன்று மஹாலக்ஷ்மி, இன்று திவ்யா – சீரியல் நடிகைகள் வாழ்க்கை பிரச்னைகளில் அடிபடும் ஈஸ்வர் பெயர்

0
1072
arnav
- Advertisement -

சின்னத்திரை ஜோடிகளான அர்னவ் – திவ்யா ஸ்ரீதர் விவகாரத்தில் சின்னத்திரை நடிகர் ஈஸ்வரின் பெயர் அடிபட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்னவ்வும் மற்றும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து இருந்தனர். திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். அவருடைய மகள் பெயர் ஜெய்சனா. ஏற்கனவே திவ்யா தன் மகளின் புகைப்படத்தை பதிவிட்டு எனது இளவரசி என்று கூறி இருந்தார். ஆனால், இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? யார் என்று விவரம் எதுவும் தெரியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார்.

-விளம்பரம்-
arnav

இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார். அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் அதை கேட்ட தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார். மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் கூறி புகார் கொடுத்து இருக்கிறார் திவ்யா.

- Advertisement -

இதையும் பாருங்க : திருமணத்தை ஷூட்டிங் சென்று சொல்ல சொன்ன அர்னவ் – திவ்யா வெளியிட்ட ஆடியோ ஆதாரம்.

ஈஸ்வர் குறித்து அர்னவ் :

இந்த நிலையில் தன் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து பேசி இருக்கும் அர்ணவ் ‘திவ்யா சொல்வது அனைத்தும் பொய். அவர் என்னுடைய குழந்தையை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது. இவளுக்கு பின்னால் நடிகர் ஈஸ்வர்தான் இருக்கிறான். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எங்களுக்குள் இருந்த பிரச்சனையை பெருசு படுத்தியது அவன்தான்.  ’மச்சி நான் உனக்கு நல்லது தான் டா செய்றேன்’ என என்னிடம் சொல்லிவிட்டு எனக்கு கெடுதல் செய்கிறார். அவருடன் இணைந்து என் மனைவி கருவை கலைக்க நாடகம் போடுகிறார் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ஈஸ்வர் – மஹாலக்ஷ்மி விவகாரம் :

முன்னாள் சன் மியூசிக் தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான மஹாலக்ஷ்மி சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரனை திருமணம் செய்துகொண்டது அனைவரும் அறிந்த ஒன்று. நடிகை மஹாலக்ஷ்மி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தேவதையை கண்டேன்” என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

தற்கொலைக்கு முயன்ற ஈஸ்வர் மனைவி :

இந்த தொடரில் ஹீரோவாக ஈஸ்வரும், வில்லியாக மஹாலக்ஷ்மியும் நடித்து வந்தனர். இந்த தேவதையை கண்டேன் சீரியல் மூலம் மஹாலக்ஷ்மிக்கும், ஈஸ்வருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்று ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்து இருந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார்.

தொடர்ந்து அடிபடும் ஈஸ்வர் பெயர் :

பின் அவர் கொடுத்த புகாரின் பெயரில் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியில் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஈஸ்வர் அவரது மனைவியை பிரிந்துவிட்டு தனியாக தான் வாழ்ந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் அர்னவ் – திவ்யா விவகாரத்திலும் ஈஸ்வரின் பெயர் அடிபட்டு இருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்து இருக்கிறது.

Advertisement