திருநங்கையையும் திருமணம் செய்து ஏமாற்றி இருக்கும் அர்னவ் – வெளியான ஷாக்கிங் ஆடியோ.

0
867
- Advertisement -

கடந்த சில தினங்களாக சின்னத்திரை நடிகர்களான அர்னவ் மற்றும் திவ்யாவின் பிரச்சினை தான் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவை செல்லமா சீரியல் நடிகர் அர்னவ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். மேலும், திவ்யா மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் செல்லம்மா சீரியல் நடிகை ஹன்சிதாவுடன் அர்னவ்விற்கு தொடர்பு இருப்பதாகவும் அதை தட்டி கேட்க போய் தன்னை தாக்கியதாகவும் இதனால் தனக்கு வயிற்றில் அடிபட்டு ரத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் திவ்யா கூறியிருந்தார்.

-விளம்பரம்-

திவ்யாவின் புகார் குறித்து பேசிய அர்னவ், அவர் பேசுவது முற்றிலும் பொய் நான் அவளை தாக்கவே இல்ல என்று கூறி இருந்தார். மேலும், தனக்கும் ஹன்ஷிதாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறி இருந்தார். அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார்.

- Advertisement -

மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் திவ்யா புகார் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அர்னவ் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது. இது குறித்து அர்னவிற்கு சம்மனும் அனுப்பி இருந்தார்கள்.

ஆனால், அர்னவ் போலீஸ் இடம் ஆஜராகாமல் இருந்தார். இந்த நிலையில் ஷூட்டிங் சென்ற அர்னவை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். இந்நிலையில், அர்ணவ் மீது மலேசியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவரும் சரமாரியாக புகார் அளித்துள்ளார். திவ்யாவின் வழக்கறிஞரை செல்போனில் தொடர்புகொண்ட அந்த திருநங்கை, அர்னவ் தன்னை ஏமாற்றியதாகக் கூறியுள்ளார். அர்ணவ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடன் நெருங்கி பழகி வந்ததாகவும், அப்போது மாலில் வைத்து தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், அர்ணவிற்கு அப்போது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். திவ்யாவின் வழக்கறிஞரிடம் அர்ணவ் பேசிய ஆடியோ இப்போது வைரலாகி வருகிறது.ஏற்கனவே செல்லமா சீரியல் நடிகையுடன் அர்ணவிற்கு தொடர்பு இருந்ததாக திவ்யா கூறி இருந்த நிலையில் அர்னவ், திவ்யா, ஹன்ஷிகா ஆகிய மூவரும் பேசி ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் ஹன்ஷிகா, திவ்யாவை வைத்துக்கொண்டே அர்னவிடம் ஐ லவ் யூ சொன்னார்.

இந்நிலையில், அர்ணவ் மீது மலேசியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவரும் சரமாரியாக புகார் அளித்துள்ளார். திவ்யாவின் வழக்கறிஞரை செல்போனில் தொடர்புகொண்ட அந்த திருநங்கை, அர்னவ் தன்னை ஏமாற்றியதாகக் கூறியுள்ளார். அர்ணவ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடன் நெருங்கி பழகி வந்ததாகவும், அப்போது மாலில் வைத்து தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அர்ணவிற்கு அப்போது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். திவ்யாவின் வழக்கறிஞரிடம் அர்ணவ் பேசிய ஆடியோ இப்போது வைரலாகி வருகிறது.இப்படி அர்ணவ்வின் கிரைம் லிஸ்ட் நீண்டு கொண்டே இருப்பதால் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement