‘உன் யோகியத்தை நிரூபிக்க சேரிய ஏண்டா கொச்சைப்படுத்தற’ – திட்டி தீர்த்த நெட்டிசன்கள். மன்னிப்பு கேட்ட ஆர்னவ்.

0
383
Arnav
- Advertisement -

சின்னத்திரை ஜோடிகளான அர்னவ் – திவ்யா ஸ்ரீதர் விவகாரத்தில் சின்னத்திரை நடிகர் ஈஸ்வரின் பெயர் அடிபட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்னவ்வும் மற்றும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து இருந்தனர். திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். அவருடைய மகள் பெயர் ஜெய்சனா. ஏற்கனவே திவ்யா தன் மகளின் புகைப்படத்தை பதிவிட்டு எனது இளவரசி என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார். அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் அதை கேட்டதால் திவ்யாவை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார். மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் கூறி புகார் கொடுத்து இருக்கிறார் திவ்யா.

- Advertisement -

மேலும், தன்னை கட்டாயப்படுத்தியதாக மதம் மாற்றம் செய்யதாக ஆர்ணவ் மீது புகார் அளித்து இருந்தார் திவ்யா. இதை தொடர்ந்து அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. இப்படி ஒரு நிலையில் திவ்யா தன் மீது கொடுத்த புகார் குறித்து அடிக்கடி பேட்டிகளில் கூறி வரும் ஆர்ணவ், இந்த பிரச்சனைக்கு எல்லாம் நடிகர் ஈஸ்வர் தான் காரணம் அவன் தான் எங்களுக்குள் இருந்த சிறு பிரச்சனைகளை எல்லாம் பெரிதுபடுத்திவிட்டார் என்று கூறி இருந்தார்.

மேலும்,அவன் ரொம்ப கெட்ட வார்த்தைகளை பேசுகிறார். நான் சேரியில் இருந்து வந்தேனா, இல்லை அவள் சேரியில் இருந்து வந்தாலா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு ரொம்ப மோசமாக பேசுகிறார் என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து சேரியில் பிறந்தவர்கள் எல்லாம் கேவலமா என்று ஆர்ணவ்வை பலரும் உன் யோகியத்தை நிரூபிக்க சேரிய ஏண்டா கொச்சைப்படுத்தற’ என்று திட்டி தீர்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சையை தொடர்ந்து தான் பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆர்ணவ்.

-விளம்பரம்-

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘நைனா முகமது எனப்படும் ஆர்ணவ் என்கிற நான் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி கொடுக்கும் பொழுது நான் என்னுடைய நண்பர் ஈஸ்வர் என்பவர் என்னை இழிவாகவும் அசிங்கமான வார்த்தைகளை பேசியதாக நிருபர்களின் முன்னிலையில் சொல்லும் பொழுது என்னை அறியாமல் சேரி என்ற தவறான வார்த்தையினை பொதுவெளியில் ஊடகம் முன் சொன்னதிலிருந்து அதை நினைத்து மனம் வருந்தினேன்.

கோவத்தினால் நான் கூறிய அந்த சொல்லிற்காக இந்த பத்திரிகை செய்தி வாயிலாக நான் அந்த வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் கூறவில்லை அப்படி கூறியிருந்தால் நான் அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன் என்று இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

Advertisement