ஜெயிலுக்கு போய்ட்டு வந்தும் அந்த ஹன்ஷிதா கூட சுத்திட்டு இருக்க – ரசிகர்கள் கமென்டிற்கு அர்னவ் கொடுத்த பதில்.

0
430
divya
- Advertisement -

கடந்த ஆண்டு சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது அர்னவ்-திவ்யா விவகாரம் தான்.நடிகர் ஆர்னவ், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து இருந்தார்கள்.பின் கடந்த ஆண்டு தான் ரகசியமாக திருமணம் செய்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக திவ்யா, காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

-விளம்பரம்-

அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார். இதனை தொடர்ந்து அர்னவ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியில் வந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் திவ்யாவிற்கு குழந்தை பிறந்தது.

- Advertisement -

இந்த நிலையில் பங்கேற்ற அருணா சமூக வளையத்தில் வந்த கமெண்ட்களுக்கு பதில் அளித்தார் இப்போது ஒரு குழந்தை அனாதையாக வளரக்கூடாது உங்கள் குழந்தைக்காகவாவது நீங்கள் இருவரும் இணைய வேண்டும் என்று ரசிகர் ஒருவரின் கமெண்டிற்கு பதில் அளித்த அர்னவ் என் மகளை நிச்சயமாக அப்படி விட மாட்டேன். நான் மூட்ட தூக்கியாவது என் மகளை காப்பாற்றுவேன்.

மேலும், தவறு செய்யாத மனிதர்கள் இல்லை அதனை மன்னித்து நீங்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்ற ரசிகரின் அமைந்திருக்கு இப்போது நான் மன்னித்து விட்டேன் என்று வைத்துக் கொள்வோம் ஆனால் மறுபடியும் எப்படி நடக்காது என்று யார் சொன்னாலும் நான் நம்ப போறது கிடையாது. ஏனென்றால் நான் தான் அதை பற்றி யோசிக்க வேண்டும். நான் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், மற்றொரு ரசிகர் ‘நீ நிஜமாகவே நல்லவனாக இருந்தால் ஜெயிலுக்கு போயிட்டு வந்த பின்னரும் அந்த ஹன்சிதாவுடன் ஆட்டம் போட்டிருக்கக் கூடாது என்று ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த அவர் விஜய் டிவியில் ஒரு அவார்ட் ஷோவிற்கு சென்றிருந்தோம். அதன் பின்னர் படப்பிடிப்புகளில் அடிக்கடி நாங்கள் ரீல்ஸ் போடுவோம். மத்தவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று என்னால் மாற்றிக் கொள்ள முடியாது.

நாங்கள் அனைவரும் சீமாக தான் வெளியில் செல்கிறோம் மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக விரைவில் செல்லாமல் இருக்க முடியுமா என்னை போன்று அவளும் எத்தனை முறை வெளியில் சுற்றி இருக்கிறார் தெரியுமா ஆனால் நான் அனைத்தையும் பதிவிடுகிறேன் அவள் பதிவிடுவது கிடையாது அவ்வளவுதான். மேலும், இங்கே ஒரு பிரச்சனை என்றால் பெண்களுக்காக குரல் கொடுக்கத்தான் அனைவரும் இருக்கிறார்கள். ஒரு பெண் அழுதாளே அனைவரும் வந்துவிடுகிறார்கள்.

ஆண்களுக்கு குரல் கொடுக்க யார் இருக்கிறார்கள். ஆம்பளைகள் எல்லாரும் பாவப்பட்டவர்கள் அதில் நானும் ஒருவர்.பெண்களுக்கு இருக்கும் சலுகைகளை சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் ஆனால் பெரும்பாலான பெண்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் பெண்களும் ஆண்களுக்கு சமமாக இன்றைய காலகட்டத்தில் சம்பாதிக்கிறார்கள் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 65% பெண்கள் தான் பாலோ செய்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

Advertisement