திவ்யாவின் வீட்டிற்கு வக்கீல்களுடன் சென்று புதிய பஞ்சாயத்தை கிளப்பிய அர்ணவ் – என்ன தெரியுமா ?

0
2148
Arnav
- Advertisement -

நடிகை திவ்யாவின் வீட்டிற்கு அர்னவ் வக்கீல்களுடன் சென்றிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது அர்னவ்-திவ்யா விவகாரம் தான். இவங்க வேற யாரும் இல்லைங்க, செல்லம்மா சீரியல் நடிக்கும் அர்னவ், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து இருந்தார்கள். பின் கடந்த ஆண்டு தான் ரகசியமாக திருமணம் செய்து இருந்தனர்.

-விளம்பரம்-
arnav

இவர்கள் இருவரும் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்து இருந்தார்கள். அதோடு இதற்கு முன்பே திவ்யாவிற்கு திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? அவர் யார்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. பின் இவர் இரண்டாவதாக அர்னவை திருமணம் செய்து கொண்டார். மேலும், திருமணம் ஆகி கொஞ்ச நாட்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார்.

- Advertisement -

அர்னவ்-திவ்யா விவகாரம்:

இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார். அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார். இதனை அடுத்து காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் திவ்யா புகார் கொடுத்து இருந்தார்.

அர்னவ் அளித்த பேட்டி:

இதனை அடுத்து அர்னவ் திவ்யா மீது குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இப்படி இருவருமே மாற்றி மாற்றி பேட்டி கொடுத்திருந்தார்கள். இதை தொடர்ந்து திவ்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அர்னவை கைது செய்தனர். பின் அர்னவ் ஜாமினில் வெளியில் வந்தார். வெளியில் வந்த பின்னரும் கர்ப்பமாக இருந்த திவ்யாவை அர்னவ் கண்டுகொள்ளவே இல்லை. பிரசவத்திற்கு கடைசி மாதம் வரை கூட ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் திவ்யா. இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனாலும், திவ்யாவை நேரில் சென்று சந்திக்காமல் இருந்தார் அர்னவ்.

-விளம்பரம்-

திவ்யா குழந்தை:

மேலும், திவ்யாவும் தனது மகளை இதுவரை அர்னவ்விற்கு காட்டாமல் இருந்து வருகிறார். குழந்தை பிறந்த சில மாதம் ஆன நிலையில் தனது குழந்தையுடன் ஷூட்டிங்கிற்கு சென்று இருந்தார் திவ்யா. பின் பேட்டியில் திவ்யா, அர்னவ் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார். என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் அர்னவ் அவர்கள் சில வக்கீல்கள் மற்றும் சில பவுன்சர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு திருவேற்காட்டில் உள்ள நடிகை திவ்யாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஆனால், நடிகை திவ்யா அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்திருக்கிறார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

திவ்யா வீட்டில் ஏற்பட்ட பரபரப்பு:

இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்திருக்கிறார்கள். போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்திருக்கிறது. அப்போது அர்னவ் கூறியது, இந்த வீடு என்னுடைய பெயரில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து திவ்யா தரப்பு வக்கீல், அர்னவ் நிபந்தனை ஜாமினில் இருக்கும் போது இந்த வீட்டிற்கு வரக்கூடாது என்று கூறியிருக்கிறார். இதனால் இருதரப்பினரையும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து புகார் அளிக்குமாறும், இருதரப்பு ஆதாரங்களையும் சமர்ப்பிக்க மாறும் கூறியிருக்கின்றது. இதனை அடுத்து நடிகை திவ்யா குடியிருக்கும் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது

Advertisement