நிகழ்ச்சியில் அர்ச்சனா பற்றி விஜய் சேதுபதி சொன்னதற்கு வெட்கப்பட்ட அருண் பிரசாத் – என்ன தெரியுமா?

0
249
- Advertisement -

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் அர்ச்சனா குறித்து அருண் பிரசாத் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் இணையத்தில் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி ஐந்தாவது வாரம் முடிந்து 36 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் என்பதால் ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம் தொடங்கி விட்டது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

பின் நான்காவது வாரம் எலிமினேஷன் நடக்கவில்லை. அதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 6 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து இருக்கிறார்கள். அதில் மாடல் அழகி வர்ஷினி வெங்கட், சீரியல் நடிகர் ராயன், நடிகரும் மாடலும் ஆன ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சுஜா வருணியின் கணவர் சிவக்குமார் ஆவார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

தற்போது போட்டியாளர்களுக்குள் சண்டை, போட்டி, பொறாமை, கலாட்டா கலவரம் என்று நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போன வாரம் கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளருமே தங்களுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்களை குறித்து மனம் திறந்து பேசி இருந்தார்கள். பின் ஐந்தாம் வாரத்திற்கான நாமினேஷனில் முத்துக்குமரன், தீபக், பாஸ் ரஞ்சித், அருண், ஜாக்லின், பவித்ரா, சாச்சனா, ஆனந்தி, அன்ஷிதா, சுனிதா ஆகியோர் பெயர் இருந்தது.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி சொன்னது:

இதில் சுனிதா வெளியேறி இருந்தார். இது பலருக்கும் ஷாக்கிங் தான். இந்த நிலையில் அர்ச்சனா குறித்து அருண் பிரசாத் கூறியிருக்கும் விஷயம்தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நேற்றைய எபிசோடில் விஜய் சேதுபதி, அருண் பிரசாத் உடைய சட்டை நன்றாக வித்தியாசமாக இருக்கிறது. சட்டை முழுக்க பட்டன்கள் எல்லாம் சூப்பராக பதிக்கப்பட்டு இருக்கிறது. உங்கள் டிசைனர் ரொம்ப நல்லா பண்றாங்க என்று பாராட்டி இருந்தார்.

அருண் பிரசாத் பதில்:

அதற்கு அருண் பிரசாத், என்னுடைய பிரண்டு தான் சார் இதை பண்றாங்க. அவர் பெயர் அர்ச்சனா என்று சொன்னவுடன் போட்டியாளர்கள் பயங்கரமாக அவரை கிண்டல் செய்திருந்தார்கள். இதனால் அருண் பிரசாத் ரொம்பவே வெட்கப்பட்டார். உடனே விஜய் சேதுபதி, அதான் எல்லார் முன்பும் சொல்லிவிட்டீர்களே, அப்புறம் என்ன ரகசியம் என்று கலாய்த்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் அருண் பிரசாத், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறியிருந்தார். இவர் இப்படி சொல்வதை அர்ச்சனா என்று எல்லோருக்குமே புரிந்தது. ஆனால், இருவரும் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement