’25 வருசமா சினிமால இருக்கேன்’ – சிவகார்த்திகேயனுடனான பிரச்சனை குறித்து முதன் முறையாக சொன்ன அருண்விஜய்.

0
575
arunvijay
- Advertisement -

சிவகார்த்திகேயனுடன் என்ன பிரச்சனை என்ற கேள்விக்கு அருண்விஜய் பதில் அளித்துள்ளார். தன்னுடைய கடின உழைப்பினாலும், தமிழ் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தினாலும் போராடி இன்று தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் படங்களில் நடித்து தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is as.jpg

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் டாக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ‘டான்’ படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் சிவா உச்சத்தில் இருந்தாலும் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் சினிமா உலகில் நுழைய பல போராட்டங்களையும் அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்தித்திருக்கிறார்.

- Advertisement -

பல ஆண்டுக்கு முன் அருண்விஜய் போட்ட பதிவு :

இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அருண் விஜய் சிவகார்த்திகேயன் குறித்து மறைமுக ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார்.சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘சீமராஜா’ திரைப்படம் வெளியான போது நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில்,’ நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும் தான் மதிப்பு கொடுப்பார்கள்” என்று பதிவிட்டிருந்தார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் கொந்தளித்து அருண் விஜய்யை தாக்கி கமெண்ட் போட்டு இருந்தார்கள்.

This image has an empty alt attribute; its file name is 1-223-732x1024.jpg

முற்றுபுள்ளி வைத்த சிவகார்த்திகேயன் :

ஆனால், அருண் விஜய் என்னுடைய டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு உள்ளது. சற்று முன்பு தான் அது சரி செய்யப்பட்டது. எனவே இதற்கு முன்பு வந்த பதிவுகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறி இருந்தார். இருப்பினும் அருண் விஜய், சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு தான் அந்த பதிவை போட்டார் என்று பலரும் தற்போது வரை நினைத்துகொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அருண் விஜய் மகன் அர்னவ் பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்தார். சிவகார்த்திகேயனின் இந்த பதிவை சற்றும் எதிர்பார்க்காத அருண் விஜய் நெகிழ்ந்து போனார்.

-விளம்பரம்-

அருண் விஜய் விளக்கம் :

இதன் மூலம் பல ஆண்டு சர்ச்சைக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்தனர். இதையும் தாண்டி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான அருண் விஜய்யின் ‘யானை’ பட ட்ரைலரை சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இப்படி ஒரு நிலையில் யானை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சிகார்த்திகேயனும் அருண்விஜய்க்கும் இருக்கும் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அருண் விஜய் ‘ அது சில misunderstanding ஆல் ஏற்பட்ட குழப்பம்.

25 வருஷமா இந்த துறையில் இருக்கேன் :

எனக்கும் அவருக்கும் எந்த ஒரு வேறுபாடோ ஒரு misunderstanding ஓ கிடையாது. நீங்களே பார்த்து இருப்பீங்க என்னுடைய ட்ரைலரையே அவர் தான் லான்ச்ஜ் பண்ணி இருப்பார். இதெல்லாம் ஒரு ஆரோக்யமான விஷயம். நம்ம 25 வருஷமா இந்த துறையில் இருக்கேன். என்னுடைய டிராக் வேற அவருடைய டிராக் வேற. அவர் இன்றைக்கு எந்த நிலைமையில் இருக்கிறார் என்பதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது அன்பை பகிருங்கள் அவ்ளோ தான். இங்கு அனைவரும் சமம் தான் என்று பேசி இருக்கிறது.

Advertisement