செட்டில் திடீர் மரணம் அடைந்த ஒப்பனை பெண் – லிவிங்ஸ்டன் மகள், அம்பிகா உள்ளிட்டோரிடம் விசாரணை.

0
834
- Advertisement -

சின்னத்திரை சீரியலின் ஒப்பனை பெண் படப்பிடிப்பு தளத்திலேயே திடீரென்று உயிரிழந்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் புது புது வித்தியாசமான கதைகளத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் சீரியல்கள் மட்டும் இல்லாமல் அந்த தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். மேலும், சீரியல் என்றாலே ஆஸ்தான சேனலாக இருப்பது சன் டிவி தான். பல ஆண்டுகாலமாக சன் டிவியில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல் தான் முன்னிலையில் இருக்கிறது.

- Advertisement -

சன் டிவி சீரியல்:

இந்த நிலையில் சன் டிவி தொடரின் ஒப்பனை கலைஞர் திடீரென்று உயிரிழந்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, சென்னை அருகே நடந்து வரும் சன் டிவி தொடர் உடைய படப்பிடிப்பு தளத்திலேயே ஒப்பனை பெண் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார். மயங்கி விழுந்த இடத்திலேயே உயிரும் போய் இருக்கிறது. பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்த பிறகு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அருவி சீரியல்:

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அப்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி தொடரில் ஒப்பனை பெண்ணாக பணியாற்றி இருந்தார் என்று தெரிய வந்து இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழும் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிடா நடித்து வரும் சீரியல் தான் அருவி. இந்த சீரியல் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

ஒப்பனை பெண் மரணம்:

இந்த தொடரில் கதாநாயகியாக நடிக்கும் ஜோவிடாவுக்கு ஜோடியாக கார்த்திக் வாசு நடிக்கிறார். மேலும் கதாநாயகனின் அம்மாவாக அம்பிகா நடிக்கிறார். இந்த தொடர் கன்னடா சீரியலின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கு படப்பிடிப்பு தளத்தில் ஒப்பனை செய்திருந்த பெண் தான் திடீரென்று மயங்கி விழுந்து இறந்திருக்கிறார்.

போலீஸ் விசாரணை:

இது தொடர்பாக போலீஸ் லிவிங்ஸ்டணின் மகள் ஜோவிடா, அம்பிகா உட்பட சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. இது தற்கொலையா? இல்லை திடீரென மரணமா? என்ற பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் சின்னத்திரை சீரியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement