தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ஆர்யா. இவர், 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நடிகர் ஆர்யா அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற 16 பெண்களில் இருந்து தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், இறுதி வரை அவர் அந்த பெண்களில் இருந்து யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடிகர் ஆர்யா அவர்கள் நடிகை சாய்ஷா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ஆர்யா. இவர், 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நடிகர் ஆர்யா அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற 16 பெண்களில் இருந்து தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், இறுதி வரை அவர் அந்த பெண்களில் இருந்து யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடிகர் ஆர்யா அவர்கள் நடிகை சாய்ஷா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின்னரும் கிளாமர் குறையாத காஜல் – கிளாமர் உடையில் கொடுத்த போஸ்.
இந்த சம்பவத்தால் கொஞ்சம் பரபரப்புஏற்பட்டு இருந்தது. ஆனால், இதுகுறித்து ஆர்யா எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் நேற்று (மார்ச் 10) ஆர்யா தனது இரண்டாவது வருட திருமண நாளை கொண்டாடி வந்த நிலையில் தன் மீது அளிக்கப்டுள்ள புகாரை வாபஸ் வாங்குமாறு ஆர்யா மிரட்டல் விடுவதாக சில ஆதாரங்களை வெளியிட்டுள்ள ஆடியோ தற்போது வைரலாக பரவி வந்தது.
மேலும், ஆர்யா, அந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் மிரட்டல் விட்டுள்ள ஆதாரத்தையும் அந்த பெண் வெளியிட்டுள்ளார். அதே போல அந்த பெண்ணிடம் சாட்டிங் செய்துள்ள ஆர்யா, தனக்கு பணக் கஷ்டம் இருப்பதாகவும் அதை சரி செய்தால் உன்னை திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் சிறிது சிறிதாக பணம் வாங்கியுள்ள ஆர்யா, சயீஷா தனது பெற்றோர்களின் வற்புறுத்தலின் பெயரில் தான் திருமணம் நடைபெற்றதாகவும். தனது கடனை அடைத்தால் அம்மா சத்தியமாக உடனே திருமணத்தை நிறுத்தியவிடுவதாகவும் ஆர்யா அந்த சாட்டிங்கில் கூறியுள்ளார்.