காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி. ’அழகென்ற சொல்லுக்கு அதுல்யா’ என்று இவரை புகழ சமூகவலைதளங்களில் பல ரசிகர் ஆர்மி கூட இருக்கின்றன.
https://twitter.com/devarajdevaraj/status/1111855552034799617
தற்போது நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் அதுல்யா அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
சாட்டை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படப்பிடிப்பு இடைவேளையில் படப்பிடிப்பு குழுவினருடன் அரட்டை அடித்தார். வேடிக்கையாக ஒருவரின் காதை அதுல்யா பிடிக்கும்போது அந்த நபர் அதுல்யாவை கடிக்க வந்தார். இந்த வீடியோவை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அதுல்யா.





