ஆட்டோகிராப் நடிகை கோபிகாவா இது. இப்போ எப்படி இருகாங்க பாருங்க.

0
25167
gopika
- Advertisement -

சேரன் நடித்து இயக்கிய “ஆட்டோகிராஃப்” படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே அதிகம் பேசப்பட்டவர் கோபிகா. அதுமட்டும் இல்லாமல் ‘மனசுக்குள்ளே காதல் வந்துச்சா’ என்ற பாடலின் மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். மேலும், ஆட்டோகிராஃப் படத்திற்கு பிறகு தான் கோபிகா சினிமா திரை உலகில் பரவலாகப் பேசப்பட்டார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் நாம் அனைவருக்கும் இவர் கோபிகா என்று தான் தெரியும். ஆனால்,உண்மையில் இவருடைய இயற்பெயர் ‘கேர்ளி அண்டோ’ ஆகும்.இவர் 1985 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூர் என்ற ஊரில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதில் இருந்தே பரதநாட்டியம் மீது அதிக ஆர்வம் உடையவர். அதனால் பரத நாட்டிய கலையில் சிறந்து விளங்கினார். மேலும், இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை திருச்சூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.

-விளம்பரம்-
Actress-gopika

பின்னர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படிப்பை படித்து முடித்தார். அதற்கு பின்னர் இவர் ஏர் ஹோஸ்டஸ் பணியில் சேர்ந்தார்.அதுமட்டும் இல்லாமல் இவருக்கு ஏர் ஹோஸ்டஸ் வேலை மீது அதிக ஆர்வம் கொண்டவர். இதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும்,கோபிகா ‘பிரநயமணிதுவல்’ என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதோடு கோபிகா தன்னுடைய முதல் படத்திலே தூள் கிளப்பினார் என்று கூட சொல்லலாம். இந்த படத்திற்கு பிறகு தான் இவருக்கு சினிமா துறையில் பல பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. இதன் காரணமாக கோபிகா ஆசை பட்டு சேர்ந்த ஏர் ஹோஸ்டஸ் பணியை விட்டு விலகினார். அதற்குப் பிறகு தன்னுடைய வாழ்க்கை பயணத்தை திரையுலகில் துவங்கினார்.

இதையும் பாருங்க : மரத்தில் சடலமாக பிரபல விஜய் டிவி நடிகையின் கணவர். கொலையா ? தற்கொலையா ?

- Advertisement -

அதற்கு பிறகு முழு கவனமும் திரையுலகில் செலுத்தினார்.இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 40 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் ஆட்டோகிராப், கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அதற்குப் பின்னர் அஜிலேஷ் சக்கோ என்பவரை 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அயர்லாந்தில் அஜிலேஷ் சக்கோ அவர்கள் மருத்துவராக பணிபுரிகிறார். திருமணத்திற்கு பிறகு கோபிகா அயர்லாந்திலே செட்டில் ஆகிவிட்டார். அதற்குப் பிறகு நடிகை கோபிகா சினிமா துறையில் எட்டிப் பார்க்கவே இல்லை.

gopika Actress
gopika Actress

அதுமட்டும் இல்லாமல் கோபிகா திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். மேலும்,என் கணவர் விருப்பப்பட்டால் நான் படத்தில் நடிப்பேன் என்று கூறிஉள்ளார். நடிகை கோபிகா குடும்ப வாழ்க்கையிலேயே முழு கவனமும் செலுத்த தொடங்கினார். தற்போது இவருக்கு இரண்டு அழகான குழந்தைகள் உளது. சமீபத்தில் கோபிகா அவருடைய கணவர், குழந்தைகளோடு எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கோபிகாவுக்கு இவ்வளவு அழகான குழந்தைகளா! என வியப்பில் உள்ளனர். மேலும், ரசிகர்கள் ஆட்டோகிராப் கோபிகா என்ற ஆச்சரியத்திலும் உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement