தெலுங்கு சினிமாவில் ‘ரவுடி’ என்று செல்லமாக அழைக்கப்படும் டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா, பெல்லி சூப்புலு’,அர்ஜுன் ரெட்டி’, `கீதா கோவிந்தம்’, டாக்ஸிவாலா’ உள்ளிட்ட தெலுங்குப் படங்கள் மூலம் தமிழ்’ ரசிகர்களைப் பெற்றவர். விஜய் தேவரகொண்டா. ‘நோட்டா’ படம் மூலம் தமிழ்ப் படங்களிலும் நேரடியாக நடிக்கத் துவங்கினர்.
அதே போல பிரபல பத்திரிகை நிறுவனமானன போர்ப்ஸ் ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதிக்கும் மணர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் கடந்த 2018 ஆம் ஆண்டின் இளம் இந்திய சாதனையாளர் பட்டியலில் விஜய் தேவரகொண்டா பெயர் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான டாக்சிவாலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது டியர் காம்ரெட் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், கார்த்திக் மாதவன் என்பவர் இயக்க உள்ள புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர். அதில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். அவரை தவிர ரஷி கண்ணாவும், இஸபெல்லாவும் நடிக்க இருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இது இரண்டாவது தெலுகு படம் என்பது குறிப்பிடத்க்கது.