பாலிடிக்ஸ், திடீர் நிறுத்தம் – ஒரு வழியாக ஆயுத எழுத்துக்கு பின் அடுத்த சீரியலில் கமிட் ஆன பிரபலம்.

0
2894
ayudha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிலும் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சின்னத் தம்பி என்று சினிமா பட பாணியில் டைட்டில்களை வைத்து வெளியான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அந்த வகையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த ஆயுத எழுத்து சீரியலும் ஒன்று. கொரோனா பிரச்சனை காரணமாக இடையில் பல்வேறு சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சில பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவங்கியது. அதே போல ஒரு சில சீரியல்களை திடீரென்று நிறுத்தியது சில சேனல்.

-விளம்பரம்-

அந்த வகையில் இந்த சீரியலும் ஒன்று தான்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கிய இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த சீரியல் துவங்கிய சில மாதங்களிலேயே பல பிரச்சனைகள்.ஆரம்பத்தில் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் அஸ்மத் கான் மற்றும் ஸ்ரீத்து கிருஷ்ணன் நடித்து வந்தனர்.

இதையும் பாருங்க : உடலையும் கொறச்சாச்சி உடையையும் கொறச்சாச்சு – முதன் முறையாக உள்ளாடையில் ஷாலினி பாண்டே நடித்திய போட்டோ ஷூட்.

- Advertisement -

அதன் பின்னர் அவர்கள் இருவரும் நீக்கப்பட்டு நெஞ்சம் மறப்பதில்லை சரண்யாவும், ஆனந்த் என்பவரும் கமிட் ஆனார்கள்.இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து இந்த சீரியலில் சரண்யாவிற்கு முன் இந்திரா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்ரீத்து கிருஷ்ணனிடம் கேட்ட போது, நல்லா போயிட்டிருந்த சீரியல்ல நாயகியை மாத்தினா இதுதாங்க நடக்கும். ’பிக்பாஸ்’ தொடங்கப்போறதால முடிச்சுட்டாங்கனு சொல்றதுலெல்லாம் உண்மையில்லை என்று கூறி இருந்தார்.

ஆயுத எழுத்து தொடருக்கு பின்னர் இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்த யாரும் வேறு எந் சீரியலிலும் இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் அஸ்மாத் கானுக்கு பின் இந்த தொடரில் ஹீரோவாக நடத்த ஆனந்த் தற்போது புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற சீரியலில் தான் நடிக்கிறாராம். சீரியலின் பூஜை போடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரே இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

-விளம்பரம்-

Advertisement