பாக்கியலட்சுமி தொடரில் இருந்து உண்மையிலேயே ரித்திகா விலகிவிட்டாரா – உறுதி செய்யும் விதமாக கோபி பதிவிட்ட பதிவு.

0
1537
Rithika
- Advertisement -

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ரித்திகா விலகியதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ரித்திகா விலகிவிட்டதை சூசகமாக தெரிவித்து இருக்கிறார் கோபி. தற்போது டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை தொடர்ந்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

தற்போது சீரியலில் இனியா-பாக்கியா கல்லூரி ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. அதாவது, இனியா 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி மீடியா சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேர்ந்து விடுகிறார். பின் பாக்யா எழியிடம் கல்லூரி படிப்பது குறித்து பேசுகிறார். அதற்கு எழில் உதவி செய்கிறார். பின் இதை வீட்டில் உள்ள எல்லோரிடமும் பாக்கியம் சொல்கிறார். இதனால் அனைவரும் பாக்கியா கல்லூரிக்கு செல்ல சம்மதம் சொல்கிறார்கள்.

சீரியலின் கதை:

ஆனால், இனியாவிற்கு மட்டும் இதில் விருப்பமில்லை. இதை அவர் கோபியிடம் சொல்ல வழக்கம்போல் கோபி புலம்புகிறார். அதோடு பழனிசாமியை பாக்கியாவிற்கு திருமணம் செய்து வைக்க பழனிச்சாமி அம்மா ஆசைப்படுகிறார். இன்னொரு பக்கம் கேண்டினில் செல்வி சமையலில் சுதப்பி விடுகிறார். இதை பார்த்த ராதிகா கோவப்பட்டு கேண்டின் ஆர்டரை கேன்சல் செய்யப் போகிறார். பாக்யா எவ்வளவு கெஞ்சியும் ராதிகா ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் மனமுடைந்து பாக்யா அழுகிறார்.

-விளம்பரம்-

முக்கிய நடிகை விலகல்:

இனி பாக்கியாவின் கேண்டீன் ஆர்டர் கையை விட்டுப் போகுமா? தன்னுடைய கனவை பாக்கியா நிறைவேற்றுவாரா? பழனிச்சாமி எடுக்கும் முடிவு என்ன? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் செல்ல இருக்கிறது. இந்த நிலையில் சீரியலில் இருந்து அம்ரிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா விலகிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக அக்ஷிதா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

கோபி போட்ட பதிவு :

இந்த சீரியலில் இருந்து விலகியது குறித்து ரித்திகா இதுவரை எந்த ஒரு பதிவையும் போடவில்லை. அதே போல சீரியலிலும் இவருக்கு பதில் இவர் என்ற அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலின் நாயகனாக கோபி தனது இன்ஸ்டா பக்கத்தில் ரித்திகாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரித்திகாவும் ‘ நன்றி சார், உங்களை போல ஒரு சிறந்த நடிகருடன் நடித்ததில் எனக்கு பெருமை’ என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ரித்திகா சீரியலில் இருந்து விலகிவிட்டது உண்மை தானா என்று பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement