நான் ஆசையோடு ஒத்துக்கொண்ட ரோல் இது, ஆனா சிலர் அழிக்கப் பார்க்குறார்கள் – பாக்கியலட்சுமி கோபி உருக்கமான பதிவு.

0
445
gopi
- Advertisement -

என்னை அழிக்க பார்க்கிறார்கள் என்று பாக்கியலட்சுமி நடிகர் சதீஷ் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியில் தற்போது டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-
gopi

மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

சீரியலில் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கேண்டினில் சில பிரச்சினை வந்ததால் இங்கிலீஷ் கிளாசை விட்டு விடுகிறார். அதன் பின் ராதிகா கேண்டின் ஆர்டரை கேன்சல் செய்து விடுகிறார். இதனால் பாக்கியா மனம் நொந்து போகிறார். பின் போராடி வேறு ஏதாவது கேண்டின் ஆர்டர் கிடைக்க கடுமையாக உழைக்கிறார். இன்னொரு பக்கம் அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் வருகிறார்.

சீரியலின் கதை:

இதை பார்த்து கணேசன் பெற்றோர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். ஒரு வழியாக அமிர்தாவையும் தன் குழந்தையும் கையோடு அழைத்துச் செல்ல கணேஷ் முயற்சிக்கிறார். இந்த உண்மை எல்லாம் கணேஷ் அப்பா, அம்மா பாக்யாவிடம் சொல்கிறார்கள். பாக்கியாவும் என்ன செய்வது என்று புரியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார். செழியன் தான் செய்த தவறை உணர்ந்து ஜெனி இடமும் குழந்தை இடமும் அன்பாக நடக்கிறார். ஆனால், செழியினை எப்படியாவது அடைய வேண்டும் என்று அவருடைய கம்பெனி ஓனர் மாலினி நினைக்கிறார். இன்னொரு பக்கம் கோபி கடன் மேல் கடன் வாங்கி அதை அடைக்க முடியாமல் தவிக்கிறார்.

-விளம்பரம்-

கோபி சதீஸ் குறித்த தகவல்:

பின் கோபி மயக்கம் அடைந்து ட்ராமா செய்கிறார். பின் ஈஸ்வரி, கோபியை தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவருமே அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இனி என்ன நடக்கும் என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த தொடரில் கோபி கேரக்டரில் நடித்து ரசிர்களிடைய அதிகம் ரீச் ஆனவர் சதீஷ். குடும்ப இல்லத்தரசிகள் பலரும் கோபி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த தொடரின் மூலம் சதீஸ் மக்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

gopi

சதீஸ் பதிவு:

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர், தான் நடித்த மலையாள சீரியல் வீடியோ ஒன்றை பதிவிட்டு நான் மிகவும் ஆசையுடனும் பெரும் எதிர்பார்ப்புடன் நடித்து ஒத்துக் கொண்ட ரோல். ஆனால் எதிர்பார்ப்புகள் பெரும் ஏமாற்றத்தில் தான் முடியும் என்பதை வாழ்க்கை எனக்கு மீண்டும் பாடம் கற்பித்தது. நாம் என்னதான் சிறப்பாக செய்தாலும் அதை அழிப்பதற்கு சில பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். நண்பர்களே இது தான் உண்மை வாழ்க்கை தத்துவம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement