கோபி – ராதிகா கல்யாணம் என்ன ஆனது ? – பாக்கியலட்சுமியில் வர போகும் பரபரப்பு ட்விஸ்ட்

0
571
baakya
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி – ராதிகா திருமணம் குறித்த ட்விஸ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த தொடரில் இவர்களுடன் ரேஷ்மா, விஷால், ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை இயக்குநர் டேவிட் இயக்கி வருகிறார். இது குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

மேலும், பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை, சுயமரியாதை இருக்க வேண்டும் என்றும், பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதையும் பாக்கியா கதாபாத்திரம் உணர்த்துகிறது. அதிலும், கடந்த சில மாதங்களாகவே பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம், சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தான்.

சீரியலின் கதை:

சீரியலில் பாக்கியா கோபியிக்கு விவாகரத்து கொடுத்து விடுகிறார். கோபி வீட்டை விட்டு வெளியே செல்கிறார். ஆனால், வீட்டில் உள்ள எல்லோரும் பாக்கியாவிடம் சண்டை போடுகிறார்கள். பின் கோபி ராதிகாவின் வீட்டிற்கு சென்று, என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள் என்று நாடகமாடுகிறார். எப்படியோ ராதிகா மனதை மாற்றி விடுகிறார் கோபி. தற்போது கோபி – ராதிகா திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

சீரியல் ப்ரோமோ:

கோபி – ராதிகாவிற்கு தான் திருமணம் என்று தெரியாமல் அவர்களுடைய திருமணத்திற்கு சமைப்பதற்கு ஆடர் பிடித்திருக்கிறார் பாக்யா. இந்த உண்மை கோபியின் அம்மா, அப்பாவிற்கு தெரிய வருகிறது. எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கோபியின் அம்மா, அப்பா இருவரும் முயற்சி செய்கிறார்கள். இந்நிலையில் கோபியின் அப்பா ராமமூர்த்தி, கோபியை கோயிலுக்கு வர சொல்லி திருமணத்தை நிறுத்த சொல்லி கேட்கிறார். ஆனால், கோபி எனக்கும் பாக்யாவிற்கு எல்லாம் முடிந்து விட்டது. யார் நினைத்தாலும் நான் ராதிகாவை திருமணம் செய்வதை நிறுத்த முடியாது என்று கோபமாக பேசுகிறார்.

சீரியலில் வரும் டீவ்ஸ்ட்:

உடனே கோபி அப்பாவும் நான் நிறுத்துவேன் என்று சபதம் போடுகிறார். இனி வரும் வாரத்தில் கோபி- ராதிகா திருமண எபிசோடு தான் ஒளிபரப்பாக இருக்கிறது. ஆகையால், கடைசி நேரத்தில் கோபி- ராதிகா திருமணம் நின்று விடுகிறது. இதை கோபியின் அப்பா ராமமூர்த்தி தான் நிறுத்துகிறார். அது எப்படி என்பதை தான் சஸ்பென்ஸ் ஆக சீரியல் வைத்திருக்கிறது. ரசிகர்களும் அந்த காட்சியை காண்பதற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement