என்னது, பாக்கியலட்சுமி இனியாவிற்கு இந்த Csk வீரர் மீது சிம்பிங்கா ? இன்ஸ்டா பதிவால் எழுந்த கிசுகிசு – அவரின் உடனடி Reaction

0
2274
Neha
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. ஆனால், மொத்த சீரியல் இயக்குனர்களையும் குத்தகைக்கு எடுத்தது போல சன் தொலைக்காட்சி தான் அதிகப்படியான சீரியல் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி தொடர் இல்லதரிசிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து அவரே தயாரித்த இந்த சீரியல் 5 வருடங்கள் ஓடியது. 

-விளம்பரம்-

இந்த தொடரில் வாணி மகன் கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவிற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் நடித்திருந்தனர். அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் தான் தேனு. இவருடைய உண்மையான பெயர் நேஹா, பிப்ரவரி 6 ஆம் தேதி 2002 பிறந்தார் இவர் கேரள மாநிலம் சாலக்குடியை பூர்விகமாக கொண்டவர். பிறந்தது கேரளவாக இருந்தலும் வரழ்ந்த்து எல்லாம் சென்னையில் தான். தந்தை மூலம் தான் சீரியலில் நுழைந்தார்.

- Advertisement -

நேஹா நடித்த படங்கள் :

இவர் தமிழில் பைரவி என்ற சீரியலில் தான் முதன் முதலில் நடித்திருந்தார். அதன் பின்னர் பிள்ளை நிலா, வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், தி எல்லோ பெஸ்டிவல் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். சீரியல் மட்டுமல்லாது பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நேகா சிபிராஜ் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஜாக்சன் துரை என்ற படத்தில் நடித்திருந்தார்.

பாக்கியலட்சுமி தொடர் :

தற்போது பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார். இதில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.. அந்த வகையில் சமீபத்தில் இவர் Csk அணி இளம் வீரரின் புகைப்படத்தை பதிவிட்டு காதல் கிசு கிசுவில் சிக்கி இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபில் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

-விளம்பரம்-

Csk அணியின் இளம் வீரர் ;

இந்த சீசனில் சென்னை அணியில் பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி சென்னை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர். அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த திறமையான வீரரான பத்திரனா , தொடர்ந்து கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கி வருகிறார். அவரது சமீபத்திய ஐபிஎல் பங்கேற்பு உட்பட பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் லீக்குகளில் அவரது பவுலிங் அவரது பிரபலத்தை மேலும் மேம்படுத்தியுள்ளன.

இப்படி ஒரு நிலையில் நேஹா தனது இன்ஸ்டா பக்கத்தில் பத்திரனாவின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘இன்னும் கொஞ்சம் நேரம்’ என்ற பாடலையும் போட்டு இருந்தார். இதனால் நேஹா, பத்திரனாவை காதலிக்கிறார் என்பது போல ஆங்கில ஊடகம் ஒன்று எழுத, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நேஹா ‘சிரிக்கிறதா, அழுறதானு கூட தெரியலடா எப்பா, கேவலமான செயல்’ என்று வேடிக்கையாக இந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement