4 ஆண்டுக்கு முன் பாக்கியலட்சுமி அடிக்ஷன் போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த இனியா. எப்படி இருந்துள்ளார் பாருங்க.

0
240
- Advertisement -

பாக்யலட்சுமி சீரியல் நடிகை இனியா பகிர்ந்திருக்கும் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை தொடர்ந்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கேண்டினில் சில பிரச்சினை வந்ததால் ராதிகா கேண்டின் ஆர்டரை கேன்சல் செய்து விடுகிறார். இதனால் பாக்கியா மனம் நொந்து போராடி வேறு ஏதாவது கேண்டின் ஆர்டர் கிடைக்க கடுமையாக உழைக்கிறார்.

சீரியல் கதை:

இன்னொரு பக்கம் அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் வருகிறார். அமிர்தாவையும் தன் குழந்தையும் கையோடு அழைத்துச் செல்ல கணேஷ் முயற்சிக்கிறார். இந்த உண்மை பாக்கியாவுக்கு தெரிகிறது. அதே சமயம் செழியினை எப்படியாவது அடைய வேண்டும் என்று மாலினி நினைக்கிறார். ஒரு கட்டத்தில் செழியன் எல்லா உண்மையும் அவருடைய அம்மா பாக்யாவிடம் சொல்லி விடுகிறார். ஜெனி-செழியன் பிரிர்ந்து இருக்கிறார்கள். தற்போது சீரியலில் பாக்கியா பொருட்காட்சி நடத்தும் இடத்தில் சமைக்கும் ஆர்டரை எடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

சீரியல் குறித்த தகவல்:

பல போராட்டங்களுக்கு பிறகு தான் இந்த ஆர்டர் அவருக்கு கிடைத்திருக்கிறது. வெற்றிகரமாக அந்த ஆர்டரை பாக்கியா செய்து கொண்டு வருகிறார். இன்னொரு பக்கம் தன் மகன்களின் வாழ்க்கையை காப்பாற்ற போராடுகிறார் பாக்கியா. இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் வெளியாகி மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. தற்போது 1000வது எபிசோடை வர இருக்கிறது. இதை ஒட்டி சீரியல் குழுவினர் பலரும் சூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்கள். தற்போது இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இனியா பதிவு:

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேகா, 4 ஆண்டுக்கு முன் பாக்கியலட்சுமி அடிக்ஷன் போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, இதே நாளில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இனியா கதாபாத்திரத்திற்கான ஆடிசனின் போது எடுத்த புகைப்படம் இது. ஒரு சிறந்த தருணத்தில் இதனை பதிவிட பொக்கிஷமாக வைத்திருந்தேன். இந்த புகைப்படத்தை பாக்கியலட்சுமி சீரியலின் சிறந்த தருணத்தில் பதிவிடுவது தான் சரியாக இருக்கும் அல்லவா ? அற்புதமான நபர்களுடன் இந்த பயணம் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது என்பதை நம்ப முடியவில்லை.

சீரியல் குறித்து சொன்னது:

பாக்கியலட்சுமி டீமிற்கும் அன்பான ரசிகர்களுக்கும், என்னை ஊக்கப்படுத்திய என்னுடைய குடும்பத்திற்கும் மிக்க நன்றி. இது நிச்சயம் அனைவருக்கும் ஒரு மைல்கள் தான். பாக்கியலட்சுமி தொடரில் என்னுடைய பங்கு இருந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன். இனியா கதாபாத்திரத்திற்காக பலர் வெறுப்பை கக்கிய போது நான் மிகவும் நொந்து போனேன். ஆனால், அனைத்திற்கும் ஒரு மதிப்பு இருக்கிறது. மேலும், இனியா கதாபாத்திரத்தை ஏண்டா பண்ணனோம் என்று நான் ஒரு நாள் வருத்தப்பட்டது கிடையாது. இந்த வாய்ப்பிற்கும் அனுபவத்திற்கும் நான் பெற்ற அறிவிற்கும் நான் சந்தித்த நபர்களுக்கும் அவர்களுடன் ஏற்பட்ட பிணைப்பிற்கும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். இந்த நான்கு ஆண்டுகளில் நான் சம்பாதித்த இந்த அனைத்தையும் பொக்கிஷமாக வைத்திருப்பேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement