தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி தொடர் இல்லதரிசிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து அவரே தயாரித்த இந்த சீரியல் 5 வருடங்கள் ஓடியது. இந்த தொடரில் வாணி மகன் கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவிற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் நடித்திருந்தனர்.
அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் தான் தேனு. இவருடைய உண்மையான பெயர் நேஹா. தற்போது பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார். தற்போது 19 வயதாகும் இவர் சமீபத்தில் தனது அம்மாவிற்கு பெண் குழந்தை பிறந்ததாக கூறி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்து சொன்ன நிலையில் ஒரு சிலரோ, இந்த வயதில் குழந்தை பெத்துக்கு வேணுமா என்று இவரது அம்மாவை விமர்சித்தனர்.
இதற்கு முன் கூட்டியே பதிலடி கொடுத்திருக்கும் நேகா, குப்பை தனமாக ரிப்லை செய்பவர்கள் பற்றி நான் கவலைபடபோவது இல்லை. எனவே, இங்கே உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று பதிவிட்டு இருந்தார். சமீபத்தில் நடிகை நேகா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களுடைய கருத்தை சொல்லுங்கள் என்று போஸ் போட்டிருந்தார். இதை பார்த்தவுடன் இவருடைய பாலோவர்ஸ் ஒருவர் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்டார்.
இதற்கு கிண்டலாக நேகா எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதும் என்று பதிலளித்துள்ளார்.இதைப்பார்த்த நேகா மேனனின் ரசிகர்கள் நிஜமாக உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? உங்களுடைய கல்யாண புகைப்படத்தை போடுங்கள் என்று அதிர்ச்சியில் கேள்விகளை கேட்ட வண்ணம் உள்ளனர்.
இதைப்பார்த்த நேகா அவர்கள் இதற்கு பதில் பதில் கொடுக்கும் வகையில் தற்போது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் கிண்டலாக தான் பதில் அளித்தேன். என்னை பார்த்தால் திருமணம் ஆன மாதிரியா தெரிகிறதா? எனக்கு இப்போது 19 வயது தான் ஆகிறது. இது என்னுடைய ரசிகர்களுக்கு இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.