கோர்ட்டில் கதறிய செழியன், விவாகரத்து செய்துவிட்டாரா ஜெனி? – பரபரப்பான கட்டத்தில் பாக்கியலகஷ்மி.

0
537
Baakiya
- Advertisement -

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி பின் சுற்றி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கேண்டினில் சில பிரச்சினை வந்ததால் ராதிகா கேண்டின் ஆர்டரை கேன்சல் செய்து விடுகிறார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

இதனால் பாக்கியா மனம் நொந்து போராடி வேறு ஏதாவது கேண்டின் ஆர்டர் கிடைக்க கடுமையாக உழைக்கிறார். பின் பாக்கியாவிற்கு பொருட்காட்சி நடத்தும் இடத்தில் சமைக்கும் ஆர்டர் கிடைக்கிறது. அதை அவர் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றிகரமாக செய்து முடிக்கிறார். இன்னொரு பக்கம் தன் மகன்களின் வாழ்க்கையை காப்பாற்ற பாக்கியா போராடுகிறார். செழியினை எப்படியாவது அடைய வேண்டும் என்று மாலினி நினைக்கிறார். ஒரு கட்டத்தில் செழியன் எல்லா உண்மையும் அவருடைய அம்மா பாக்யாவிடம் எல்லா விடுகிறார்.

சீரியல் கதை:

இதனால் ஜெனி-செழியன் பிரிர்ந்து இருக்கிறார்கள். கடந்த வாரம் ஜெனியின் அப்பா செழியனுக்கு விவாகரத்து நோட்டீசை அனுப்பி விடுகிறார். பின் நீதிமன்றத்தில் ஜெனி- செலியனுடைய விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது . இன்னொரு பக்கம் கணேஷ் உயிருடன் இருக்கும் விஷயம் எழில், அமிர்தா, பாக்கியா குடும்பத்திற்கு தெரிய வருகிறது. கணேஷ் வீட்டிற்கு வந்து அமிர்தாவையும் குழந்தையும் அழைத்து செல்ல சண்டை போடுகிறார். ஆனால், எழில் குடும்பம் ஒத்துக்கொள்ளவில்லை. பின் கணேஷ், போலீஸ் மூலம் அமிர்தாவை அழைத்து செல்ல முயற்சிக்கிறார்.

-விளம்பரம்-

பாக்கியா மகன்களின் நிலைமை:

அமிர்தா, கணேஷ் உடன் நான் போக மாட்டேன், எழிலுடன் வாழ்வேன் என்று சொல்கிறார். பின் போலீஸ் கணேஷை திட்டி அனுப்பி விடுகிறார். இருந்தாலும் கணேஷ் விடாமல் அமிர்தா, எழிலை தொடர்ந்து பாலோ செய்து கொண்டே இருக்கிறார். இந்த வாரம் எபிசோடில் பாக்கியாவிற்கு புதிய ரெஸ்டாரன்ட் திறக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் வீடே சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், கோபி கடன் தொல்லை தாங்க முடியாமல் தன்னுடைய கம்பெனியை விற்கும் நிலைக்கு வருகிறார். இதை வீட்டில் சொல்ல முடியாமல் கோபி தவித்துக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் நீதிமன்றத்தில் செழியன்- ஜெனி விவாகரத்து நடக்கிறது. அப்போது நீதிபதி செழியனிடம் விசாரிக்கிறார். செழியன், நான் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன். ஜெனி என்னுடன் இருக்கும்போது அவள் அருமை புரியவில்லை. அவள் இல்லாத போது தான் எனக்கு புரிகிறது. தயவுசெய்து ஜெனி என்னை மன்னித்துவிடு என்று அழுகிறார். இதை பார்த்து ஜெனி கண்கலங்கி நிற்கிறார். இனிவரும் நாட்களில் ஜெனி செழியனை மன்னித்து ஏற்றுக் கொள்வாரா? விவாகரத்து செய்வாரா? எழில்- அமிர்தா நிலைமை என்ன? கணேஷ் என்ன செய்யப் போகிறார்? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

Advertisement