ஷூட்டிங் நேரமாகுது என்று பைக்கில் Helmet போடாமல் சென்று விழுந்த பாக்யலட்சுமி சீரியல் நடிகை – தலையில் ஊத்திய ரத்தம்.

0
878
kambam
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை Helmet போடாமல் சென்று விபத்தில் சிக்கி இருந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும்,

-விளம்பரம்-

அவரின் கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, திவ்யா கணேஷ், வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

மேலும், நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாக, தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும், பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை உணர்த்துகிறது. தற்போது இந்த சீரியலில் கோபி இரண்டாவது திருமணம் செய்ய போகிறார். இந்த உண்மை எழிலுக்கு தெரிய வருமா? பாக்கியா கணவர் ராதிகாவிடம் எப்போது மாற்றிக்கொள்வார்? என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாக்கியலட்சுமி -பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இந்நிலையில் இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி ஆகிய இரு குடும்பங்களின் மெகா சங்கமம். பாக்கியா மாமனாரின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு இரு குடும்பங்களும் சந்தித்திருக்கிறது இதனால் சீரியலில் நடக்கும் பல விஷயங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த வார எபிசோட்கள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. சமிபத்தில் கூட 2022 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா நடந்தது.

-விளம்பரம்-

பாக்கியலட்சுமி சீரியல் பெற்ற விருதுகள்:

அதில் பாக்கியலட்சுமி சீரியல் பல பிரிவுகளில் விருதுகளை பெற்று இருந்தது. பலரும் இதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், திவ்யா கணேஷ் மற்றும் நேகா ஆகியோர் இந்த விபத்து தொடர்பாக வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோவில், பாக்கியலட்சுமி தொடரில் செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கம்பம் மீனா செல்லமுத்து என்பவர் காலை சூட்டிங்கிற்கு ஹெல்மெட் போடாமல் தன்னுடைய வண்டியில் வந்து இருக்கிறார்.

மீனாவிற்கு நடந்த விபத்து:

அப்போது வீட்டில் இருந்த ஒருவர் மாம்பழம் சாப்பிட்டு விட்டு அதன் கொட்டையை எடுத்து வீசி இருக்கிறார். அது மீனா மண்டையில் விழுந்திருக்கிறது. விழுந்த வேகத்தில் மீனா மண்டை உடைந்து ரத்தம் வந்து இருக்கிறது. இதனால் மீனா தயவுசெய்து மாம்பழத்தை சாப்பிட்டு கொட்டையைப் டஸ்பின்னில் போடுங்கள் என்று அறிவுரை செய்து இருந்தார். உடனே நேஹா மற்றும் திவ்யா இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் இப்படித்தான் நடக்கும். தயவு செய்து அனைவரும் ஹெல்மெட் அணிந்தே பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள் என்று தெரிவித்து இருந்தனர்.

Advertisement