உச்சத்தில் இருந்த போது ஏற்பட்ட கோர விபத்தால் நாசமான சினிமா வாய்ப்பு – பாட்ஷா பட தம்பி நடிகர் மீண்டு வந்த கதை.

0
4351
shahsi
- Advertisement -

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் தலைவர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் தான். அந்த வகையில் அவருடைய நடிப்பில் வெளிவந்த முக்கிய படங்களில் ஒன்றாக திகழ்வது பாட்ஷா படம். 1995 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த பாட்ஷா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், சரன்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் மாணிக்கம் என்ற பெயரில் ஆட்டோகாரன் ஆகவும், பாட்ஷா என்ற பெயரில் கேங்ஸ்டார் ஆகவும் நடித்திருப்பார். இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், ரஜினிகாந்த் அவர்களின் சினிமா பயணத்தில் இந்த பாட்ஷா படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இந்த படத்தில் நடித்த அவரது தம்பி உங்களுக்கு நினைவிருக்கிறதா.

இந்த படத்தில் ரஜினியின் தம்பி ஒரு போலீஸ் அதிகாரியாக இருப்பார்.மேலும் அவர் பேசிய “சொல்லுங்க நீங்க யாரு, பாம்பேல நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க சொல்லுங்க ” என்ற வசனம் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் தம்பியாக நடித்தவரின் பெயர் ஷாஷி குமார். கர்நாடகாவை சேர்ந்த இவர் 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதன் முதலில் கன்னட மொழியில், நடிகர் ராகவேந்திரா ராஜ்குமார் நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான “சிரஞ்சீவி சுதாகரா” என்ற படத்தில் வில்லனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர், 1989 ஆம் ஆண்டு இவர் நடித்த யுத்த காண்டம் என்னும் படம் சூப்பர் ஹிட்டானது.அதன் பின்னர் தமிழ், கன்னடம்,மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்து வந்தார். தனக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து அரசியலில் ஈடுபட்ட இவர் கர்னாடகாவில் தேர்தலில் நின்று எம். பி யாகவும் பொறுப்பேற்றார். சினிமா அரசியல் என்று பிசியாக இருந்த இவர் குடித்து விட்டு வாகனம் ஒட்டியதில் ஒரு மிகப்பெரிய விபத்தை சந்தித்து, நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்தார்.

அதன் பின்னர் உடல் நிலை தேறி மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். இவர் சினிமாவில் இறுதியாக முகம் காண்பித்த படம் கன்னடத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான “சிவயோகி ஸ்ரீ புட்டயஜ்ஜா” என்ற படத்தில் தான். இவர் சரஸ்வதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு அக்ஷித் என்ற மகன் இருக்கிறார். இவரும் கன்னட சினிமாவில் நடிகராக திகழ்ந்து வருகிறார். மேலும், இவரது மகள் ஐஸ்வர்யா, ஜார்னலிசம் படித்து முடித்துவிட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Advertisement