ஷீத்தலுக்கு முன்பே 21 வயது பொண்ணுடன் காதல், கேன்சரால் விழுந்த விரிசல் – பப்லு சொன்ன பிளாஷ் பேக்.

0
510
- Advertisement -

தன்னுடைய முதல் காதல் குறித்து மனம் திறந்து நடிகர் பப்லு பிரித்விராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியாவில் பப்லு பிரித்விராஜ்-ஷீத்தல் விவகாரம் தான் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக மிக பிரபலமான நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். இவர் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள்.

-விளம்பரம்-

மேலும், இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. இவர் பீனா என்பவரை திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். பின் இவர் தன்னுடைய முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் பப்லுக்கு மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. இவரின் பெயர் ஷீத்தல். முதலில் இந்த பெண் பப்லுக்கு தொழில் ரீதியாக தான் உதவியாளராக இருந்தார்.

- Advertisement -

பிரிதிவிராஜ்-ஷீத்தல் திருமணம்:

மேலும், கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்ததாக தகவல்கள் வெளியானது. இருவருக்கும் 30 வயது வித்தியாசம் இருக்கிறது. இவர்களுடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் இவர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தங்களுடைய வேலையை செய்திருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில வாரமாகவே இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது. அதோடு சீத்தல் மற்றும் பிரிதிவிராஜ் இருவருமே தங்களுடைய சோசியல் மீடியாவில் தாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டு புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கிறார்கள்.

babloo

பிரிதிவிராஜ்-ஷீத்தல் பிரிவு:

இதை பார்த்த பலரும் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? சண்டையா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், இது குறித்து இருவருமே எந்த ஒரு உறுதியையும் செய்யவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக இவர்கள் பேட்டி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரிதிவிராஜ் கூறியது, என்னுடைய 19 வயதில் நானும் என்னுடைய தங்கையும் ஒரு நடன போட்டிக்கு சென்றிருந்தோம். அப்போது ஒரே கூட்டமாக இருந்தது. அங்கு மிஸ் இந்தியாவாக ஒரு பெண் வந்திருந்தார்.

-விளம்பரம்-

முதல் காதல் குறித்து சொன்னது:

அவரை சுற்றி தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவள் ரொம்ப அழகாக இருந்தாள். ஆனால், நான் அவரை பார்க்க கூடாது என்று என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால், முடியவில்லை. மீண்டும் மீண்டும் என்னுடைய கண் அவளை சுற்றி தான் சென்றது. அந்த போட்டியில் நானும் என்னுடைய தங்கை தான் முதல் பரிசை பெற்றோம். பிறகு அந்த பெண் திடீரென்று என் கண்முன்னே வந்து நின்று என்னுடைய நடனத்தை பாராட்டினாள். நான் அவரிடம் நன்றி சொன்னேன். உடனே அவர், உங்களுடன் ஆட வேண்டும் என்றார். நானும் ஆடலாமே என்று சொல்லி விட்டேன். அதன் பிறகு நாங்கள் இருவரும் ஆடினோம்.

babloo

காதலி பிரிவு:

கிட்டத்தட்ட இரவு இரண்டு மணி வரை நாங்கள் ஆடிக்கொண்டே இருந்தோம். அதற்குப் பிறகு நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். எங்களுடைய நட்பு காதலாக மாறியது. இதை நான் என்னுடைய அம்மாவிடம் சொன்னேன். அம்மாவும் உனக்கு 19 வயது தான் ஆகிறது என்று திட்டி அவளையும் திட்டிவிட்டார். பின் அவள், உங்களை நான் சந்திக்க மாட்டேன். உங்கள் அம்மா மோசமாக என்னிடம் பேசிவிட்டார் என்று சொல்லி சென்று விட்டாள். ஆனால், அதை பற்றி எல்லாம் கவலைப்படவே இல்லை. போடி மயிர் என்று சொல்லிவிட்டு நான் என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு மூன்று மாதங்கள் கழித்து தான் அவருடைய நண்பர்கள் அவளை வந்து பார்க்குமாறு என்னிடம் சொன்னார்கள். அவர் கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட ஒரு ஆறு மாதத்தில் அவள் கேன்சரால் இறந்து விட்டாள் என்று கூறியிருந்தார்

Advertisement