24 வயது காதலியுடன் மீண்டும் இணைந்த பப்லு – வைரலாகும் செல்ஃபி புகைப்படம்.

0
332
babloopritiviraj
- Advertisement -

பிரிந்த வேகத்திலேயே தன்னுடைய காதலியுடன் பப்லு இணைந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக மிக பிரபலமான நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள். இவர் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Babloo

மேலும், இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். பின் இவர் சின்னத்திரையில் மர்மதேசம், அரசி, வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் பீனா என்பவரை திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார்.

- Advertisement -

பிரிதிவிராஜ்-ஷீத்தல் திருமணம்:

பின் இவர் தன்னுடைய முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் பப்லுக்கு மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. இவரின் பெயர் ஷீத்தல். முதலில் இந்த பெண் பப்லுக்கு தொழில் ரீதியாக தான் உதவியாளராக இருந்தார். பின் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியானது. இருவருக்கும் 30 வயது வித்தியாசம் இருக்கிறது.

நெட்டிசன்கள் விமர்சனம்:

பலர் இவருடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் இவர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தங்களுடைய வேலையை செய்திருந்தார்கள். அதற்குப் பின் இருவரும் இணைந்து நிறைய பேட்டிகள் எல்லாம் கொடுத்து இருக்கிறார்கள். அப்போது பப்லு, சீத்தல் எனக்கு ஒரு நல்ல மனைவியாக இருக்கிறார். என்னுடைய முதல் மனைவி ஏற்படுத்திய காயங்களை எல்லாம் அவர் தான் ஆற்றிக் கொண்டிருக்கின்றார். இந்த வயதிலும் எனக்கு பாடி டிமாண்ட் தேவைப்படுகிறது. அதனால் தான் நான் சீத்தலை திருமணம் செய்து கொண்டேன் என்றெல்லாம் பேசி இருந்தது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சைக்களை கிளப்பி இருந்தது.

-விளம்பரம்-

பிரிதிவிராஜ்-ஷீத்தல் பிரிவு:

இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில மாதமாக இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது. அதோடு சீத்தல் மற்றும் பிரிதிவிராஜ் இருவருமே தங்களுடைய சோசியல் மீடியாவில் தாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டு புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் பிரித்திவிராஜ் தன்னுடைய பிறந்தநாளை தனியாக கொண்டாடி இருக்கிறார். இதை பார்த்த பலரும் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? சண்டையா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். பின் ரசிகர் ஒருவர், நீங்கள் பிரிந்து விட்டீர்களா? என்று கேட்டதற்கு சீத்தல் லைக்ஸ் கொடுத்து இருந்தார்.

மீண்டும் சேர்ந்த பிரிதிவிராஜ்-ஷீத்தல்:

இதன் மூலம் இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பது உண்மையில் தெள்ளத் தெளிவாக இருக்கிறது. இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. இந்த நிலையில் தற்போது இவர்கள் சேர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. அதாவது, சமீபத்தில் ரன்பி கபூர் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியான படம் அனிமல். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பப்லு நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து இந்த படத்தின் சக்சஸ் மீட் மும்பையில் நடைபெற்றிருக்கிறது. இதில் பப்லு தன்னுடைய காதலியான சீத்தலுடன் கலந்து கொண்டிருந்தார். பின் அனிமல் பட பிரபலங்களுடன் பப்லு-சீத்தல் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் இருவரும் சேர்ந்து விட்டார்களா? என்று அதிருப்தியில் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்

Advertisement