அவர் காலம் முடிந்துவிட்டது – சூர்யாவை பற்றி உடன் நடித்த பப்லூ சொன்ன வீடியோ தற்போது வைரல்.

0
486
- Advertisement -

சூர்யா குறித்து நடிகர் பப்லு அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருடைய தந்தை சிவக்குமார் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர். சூர்யா நல்ல நடிகர் என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதர் என்று சொல்லலாம். இவர் நிறைய சமூக சேவைகளையும் செய்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-
Surya

இவருடைய குடும்பமே அகரம் என்று அறக்கட்டளை தொடங்கி தங்களால் முடிந்த குழந்தைகளின் கல்வி செலவிற்கு உதவி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சூர்யா சுயநலம் கொண்டவர் என்று பப்லு பிரித்திவிராஜ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பூகம்பகமாக வெடித்து இருக்கிறது. அதாவது, சில வருடங்களுக்கு முன்பு பப்லு அளித்த பேட்டியில் நடிகர்களின் நல்ல விஷயம், கெட்ட விஷயம் குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள். அதில் அவர், அஜித் ஒரு நல்ல மனிதர்.

- Advertisement -

சூர்யா குறித்து சொன்னது:

கெட்ட விஷயம் என்றால் அவருக்கு டெடிக்கேஷனே இல்லை என்று கூறினார். அவரை அடுத்து சூர்யா ஒரு நல்ல நடிகர். கெட்ட விஷயம் என்றால் அவர் சுயநலம் மிக்கவர். அவரது சகாப்தம் முடிந்துவிட்டது என்று பேசியிருக்கிறார். தற்போது இது தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பலருமே சூர்யாவை எப்படி நீங்கள் சுயநலம் மிக்கவர் என்று கூறலாம் என கொந்தளித்து எழுப்பி இருக்கிறார்கள். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக மிக பிரபலமான நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ்.

பிரித்திவிராஜ் திரைப்பயணம்:

இவர் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள். கோலிவுட் ஜாம்பவானாக திகழ்ந்த எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரிதிவிராஜ். மேலும், இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பிரித்திவிராஜ் குடும்பம்:

பின் இவர் சின்னத்திரையில் மர்மதேசம், அரசி, வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் பப்ளூ 1994ஆம் ஆண்டு பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்ட்டிஸம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கிறார். பின் இவர் தன்னுடைய முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் பப்லுக்கு மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு இருக்கிறது.

பிரிதிவிராஜ்-ஷீத்தல் பிரிவு:

முதலில் இந்த பெண் பப்லுக்கு தொழில் ரீதியாக தான் உதவியாளராக இருந்தார். பின் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியானது. இவரின் பெயர் ஷீத்தல். இருவருக்கும் 30 வயது வித்தியாசம் இருக்கிறது. இருந்தாலும், இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு செய்த ரீல்ஸ் வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பப்லு, எனக்கும் ஷீத்தலுக்கும் திருமணமாகவில்லை. நாங்கள் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்தோம் என்று பேசி இருந்தார். தற்போது சீத்தல் மற்றும் பிரிதிவிராஜ் இருவருமே பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement