இவங்க இன்னும் 70ஸ்சே தாண்டலையா – சரத்குமார் படத்தை உருட்டி வரும் பாரதி கண்ணம்மா சீரியல். கேலி செய்யும் ரசிகர்கள்

0
376
Barathi
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக ரேட்டிங்கில் கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் மற்ற சீரியலால்களை காபி அடிக்கிறது என்றுதான் சொல்லி வந்தனர் ஆனால் இப்போது திரைப்படங்களையும் காபி அடிக்கிறது என்று ஆதாரத்துடன் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. பாரதி கண்ணம்மா சீரியல் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது என்பதை போல தற்போது நெட்டிசங்களும் தங்களுடைய கருத்தை பதிவிட்டு வருகின்றனர். சீரியலின் தொடக்கத்தில் எதிர்மறை கருதுக்களை பெற்றாலும் தற்போது எப்போது இந்த சீரியல் முடியும் என்று பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் பாரதி கண்ணம்மா சீரியலோ ஒவ்வொரு வாரமும் புதிய திருப்பங்கள் புதிய கதை என தொடந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பாரதி DNA டெஸ்ட் எடுத்தால் போதும் இந்த சீரியல் முடிந்து விடும் பாரதி கண்ணம்மா ஒன்றாக சேர்ந்து சீரியலுக்கு என்டு கார்டு போடுவார்கள் என்று பார்த்து பாரதி இறங்கி வரும் நேரத்தில் கதாநாயகி கண்ணம்மா தற்போது குழந்தையை எடுத்துக்கொண்டு தன்னுடைய சொந்த கிராமத்திற்கே சென்று விட்டார்.

இந்நிலையில் ஊர் ஊராக சென்று கண்ணம்மாவை தேடிய பாரதி பின்னர் கண்ணம்மா இருக்கும் ஊருக்கே சென்று விட்டார், அங்கு கண்ணம்மாவை அழைத்து போக வருகையில் அவருக்கு துணையாக ஊர் மக்கள் வரரே பாரதியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டார்கள். இதனால் பாரதி எப்படி கண்ணம்மாவை சமாதானப்படுத்தி அழைத்து செல்வார் என்று புதிய கதை தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே வென்வாவின் திட்டத்தை அனைவரும் அறிந்திருக்கயில் கண்ணம்மாவை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று புதிய திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இதனை பார்த்த ரசிகர்களா இந்த கதை சரத்குமார், நம்பியார், தேவயானி நடித்த மூவேந்தர்களின் கதையா போல உள்ளது என்று கூறி விமரிசித்து வருகின்றனர். சரந்த்குமார் நடித்த மூவேந்தர்கள் படத்திலும் தேவயானி கோவித்து கொண்டு வீட்டிற்கு வரவே சரத்குமார் அங்கு வந்தது சமாதனப்படுத்தி எப்படி கடைசியில் ஒன்றாக இணைகிறார்கள் என்பதுதான் கதை. இந்நிலையில் இதற்கடுத்தாவது சீரியல் முடியுமா என்று பார்த்தால் லட்சிமி மற்றும் ஹேமா புதிய கதையா உருவாக்குகின்றனர். இப்படியே போனால் பல வருடங்கள் இந்த சீரியல் இழுக்கும் என்று கூறிவருகின்றனர் ரசிகர்கள்

Advertisement