அதிரடியாய் பாக்கியா வீட்டிற்குள் நுழையும் ராதிகா, இனி கோபி நிலைமை – பரபரப்பான கட்டத்தில் பாக்கியலட்சுமி சீரியல்

0
271
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் பாக்கியா வீட்டிற்கு ராதிகா வரும் புதிய ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் தற்போது டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

சீரியலில் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கேண்டினில் சில பிரச்சினை வந்ததால் இங்கிலீஷ் கிளாசை விட்டு விடுகிறார். அதன் பின் ராதிகா கேண்டின் ஆர்டரை கேன்சல் செய்து விடுகிறார். இதனால் பாக்கியா மனம் நொந்து போகிறார். பின் போராடி வேறு ஏதாவது கேண்டின் ஆர்டர் கிடைக்க கடுமையாக உழைக்கிறார். இன்னொரு பக்கம் அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் வருகிறார்.

சீரியலின் கதை:

இதை பார்த்து கணேசன் பெற்றோர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். ஒரு வழியாக அமிர்தாவையும் தன் குழந்தையும் கையோடு அழைத்துச் செல்ல கணேஷ் முயற்சிக்கிறார். இந்த உண்மை எல்லாம் கணேஷ் அப்பா, அம்மா பாக்யாவிடம் சொல்கிறார்கள். பாக்கியாவும் என்ன செய்வது என்று புரியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார். செழியன் தான் செய்த தவறை உணர்ந்து ஜெனி இடமும் குழந்தை இடமும் அன்பாக நடக்கிறார். ஆனால், செழியினை எப்படியாவது அடைய வேண்டும் என்று அவருடைய கம்பெனி ஓனர் மாலினி நினைக்கிறார். இன்னொரு பக்கம் கோபி கடன் மேல் கடன் வாங்கி அதை அடைக்க முடியாமல் தவிக்கிறார்.

-விளம்பரம்-

பாக்கியா வீட்டிற்கு வரும் கோபி:

பின் கோபி மயக்கம் அடைந்து ட்ராமா செய்கிறார். பின் ஈஸ்வரி, கோபியை தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவருமே அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் செழியனின் ஓனர் மாலினி வீட்டிற்கு அடிக்கடி வந்து செழியனை மிரட்டுகிறார், தொல்லை செய்கிறார். இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் குறித்த புதிய ப்ரோமோ தான் வெளியாகி இருக்கிறது. அதில் கோபி பாக்கியா வீட்டிலே இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த ராதிகா தன்னுடைய அம்மாவிடம் புலம்புகிறார்.

ராதிகா என்ட்ரி:

பின் அவருடைய அம்மா, நீ பாக்கியா வீட்டிற்கு மீண்டும் செல் என்று சொல்கிறார். உடனே ராதிகாவும் தன்னுடைய துணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு பாக்கியா வீட்டிற்கு வருகிறார். இதை பார்த்து ஈஸ்வரி, கோபி துணியா, கொடுத்துவிட்டு செல் என்று சொன்னவுடன் ராதிகா, கோபியை அனுப்பப் போகிறீர்களா? இல்லையா? என்று கேட்கிறார். ஆனால், முடியாது என்று ஈஸ்வரி கத்துகிறார். இதனால் ராதிகா, நானும் இங்கதான் இருக்கப் போகிறேன் என்று கோபமாக சொல்லி வீட்டிற்குள் நுழைகிறார். இனி வரும் நாட்களில் மீண்டும் ராதிகா- கோபி இருவரும் பாக்கியா வீட்டில் இருந்து பிரச்சனை செய்வார்களா? ராதிகா கோபியை கூட்டிக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு செல்வாரா? பாக்கியா வீட்டை விட்டு செல்வாரா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் செல்ல இருக்கிறது.

Advertisement