பவதாரிணி திருமண வாழ்க்கை குறித்து வாய் கூசாமல் பேசிய பயில்வான் – உறவினர் பதிலடி.

0
443
- Advertisement -

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி அவர்கள் மைடியர் குட்டி சாத்தான் என்ற படத்தின் மூலம் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். பின் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் பவதாரணிக்கு புற்றுநோய் இருந்திருக்கிறது. இதற்காக இவர் சமீப காலமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட கடந்த ஐந்து மாதங்களாக அவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டு வந்து இருக்கிறார். அதேபோல் இளையராஜாவும் இலங்கையில்தான் இருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த வாரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பவதாரணி உயிரிழந்திருக்கிறார். தற்போது அவருக்கு வயது 47. இவருடைய இறப்பு கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

பலரும் இளையராஜா குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்து இருக்கிறர்கள். பின் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக பவதாரணி உடல் வைக்கப்பட்டிருந்தது. அங்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பிரபலங்கள் என பலருமே தங்களுடைய இரங்களை தெரிவித்து வந்தார்கள். இதை அடுத்து குடும்ப சம்பிரதாய படி சடங்குகள் எல்லாம் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழக்கப்பட்டது. மேலும், பவதாரணி குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

பயில்வான் ரங்கநாதன் வீடியோ:

இப்படி இருக்கும் நிலையில் பவதாரணியை குறித்து பயில்வான் ரங்கநாதன் தவறாக பேசியிருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் அவர், இளையராஜா வீட்டில் எப்போதும் பாட்டு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அவர் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவுக்கு இசையை சொல்லிக் கொடுத்தார். ஆனால், பவதாரணிக்கு இசை கற்றுக் கொடுக்கவில்லை. இருந்தாலும் இவருக்கு இசையின் மீது அதிக ஆர்வம். அதை புரிந்து கொண்டு இளையராஜா அவருக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தந்தார். பின் பவதாரணி எஸ் என் ராமச்சந்திரன் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய இல்லற வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை.

சபரி அண்ணன் பேட்டி:

இதனால் பவதாரணி தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து தன்னுடைய தந்தை இளையராஜாவுடன் வசித்து வந்தார் என்றெல்லாம் விமர்சித்து பேசி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பவதாரணியின் குடும்பம் பயில்வான் ரங்கநாதன் மீது கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக பவதாரணியின் கணவரின் அண்ணன் கூறியிருப்பது, பவதாரணி தனது தந்தைக்காக அவர் கணவரை பிரிந்து விட்டார் என்றெல்லாம் பயில்வான் பேசி இருந்தார். பவதாரணிக்கு திருமணம் ஆகும்போது 21 வயது. அதனால் பவதாரணி கொஞ்சம் சின்ன புள்ளைத்தனமாக இருந்தார்.

-விளம்பரம்-

பயில்வான் குறித்து சொன்னது:

அவருக்கு குடும்பத்தை பற்றி பொறுப்பில்லாமல் இருந்திருக்கும். பின் கொஞ்ச நாட்களுக்கு பிறகு பவதாரணி குடும்ப பொறுப்பு எல்லாம் உணர்ந்து அவருடைய கணவர் உடன் சேர்ந்திருந்தார். மேலும், தன் கணவருக்கு கொரோனா தொற்று இருப்பதைக் கண்டு பவதாரணி தான் அவரை நன்றாக பார்த்துக் கொண்டார். சபரிக்கும் பவதாரணிக்கும் ஆரம்பத்தில் சின்ன சின்ன பிரச்சனை வந்ததெல்லாம் உண்மை. ஆனால், பயில்வான் கூறியது எல்லாம் பொய். இளையராஜாவுக்கு பவதாரணி என்றால் உயிர். அவருக்காக எதையும் செய்வார். சபரி பவதாரணிக்காக பல நிகழ்ச்சிகள் எல்லாம் இளையராஜா ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

பவதாரணி குறித்து சொன்னது:

கடந்த வருடம் டிசம்பர் மாதம் தான் பவதாரணிக்கு புற்றுநோய் என்று தெரிய வந்தது. இதனால் சபரி ரொம்பவே மனமடைந்து போனார். பின் அவர் ஒரு டாக்டரிடம் பேசி சொன்னதால் இலங்கைக்கு மருத்துவம் பார்க்க பவதாரணி அழைத்து சென்றிருந்தார்கள். ஆனால், அங்கேயும் பவதாரணி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். பவதாரணி இறப்பதற்கு முன்பு சபரிடம், எனக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணி தாங்க என்று சொல்லியிருந்தார். அதற்குள் பவதாரணி இறந்து விட்டார் என்று கூறி இருக்கிறார்.

Advertisement