அவரும் எனக்கு போன் பண்ணவில்லை. நானும் அப்படியே விட்டுட்டேன் – இளையராஜாவுடனான பிரச்சனை. சீக்ரெட் பகிர்ந்த பாக்கியராஜ்.

0
8940
bhagyaraj
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாக்கியராஜ். இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் பாக்யராஜ்க்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் குறித்தும், மீண்டும் அவர்கள் இணைந்ததை குறித்தும் பாக்யராஜ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, நான் இளையராஜா உடன் ‘சின்ன வீடு’ என்ற படம் வரைக்கும் பண்ணேன்.

-விளம்பரம்-
ilayarajaِ hashtag on Twitter

அடுத்த படம் பண்ணும்போது கொஞ்சம் முன்கூட்டியே சொல்லுங் என்று இளையராஜா சொல்லியிருந்தார். பின் நான் கதை ரெடி அவர் எப்ப கேக்குறாரு என்று சொல்லுங்க அப்போ கம்போஸிங் வைத்து கொள்ளலாம் என்று அவர் அசிஸ்டென்ட் இடம் சொன்னேன். ஆனால், அந்த அசிஸ்டென்ட் திடீர் என்று சாரைப் போய் வீட்டில் பாருங்க என்று சொல்லிட்டார். அதுக்கு நான் ஏன் வீட்டில் போய் பார்க்கணும். எப்போதும் நாங்கள் ஸ்டூடியோவில் தானே பார்த்து கொள்வோம் என்று சொன்னேன். பிறகு நான் அவர் வேலையாக இருந்தார் என்றால் அவர் எப்ப ஃபிரீயா இருப்பார் என்று சொல்லு அப்போது கம்போஸிங் வைத்து கொள்ளலாம் என்று சொன்னேன்.

- Advertisement -

அந்த அசிஸ்டென்ட் மீண்டும் வீட்டுக்குப் போய் சாரைப் பாருங்க என்று சொன்னார். நான் வந்துட்டு போனேன்னு என்று சொல்லிவிடு என்று கூறி நான் கிளம்பி விட்டேன். நானும், இளையராஜாவும் வெளியே எத்தனையோ இடங்களில் ஒன்றாக சேர்ந்து வேலை பார்த்திருக்கோம். நான் கேட்கிற மியூசிக் அவர் போட்டு கொடுப்பார். மேலும், எங்களுக்குள் பட்ஜெட் பிரச்னை கூட வந்தது இல்லை. இது தான் முதல் முறை ஒருத்தர் வீட்டுக்குப் போய் பாருங்க என்று சொன்னது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. உடம்பு சரியில்லை என்றால் சொல்லுங்க தாராளமாக வீட்டுக்குப்போய் பார்க்கலாம். படம் பண்றதுக்கெல்லாம் ஏன் வீட்டுக்குப்போய் பார்க்கணும்.

K Bhagyaraj | Rasukutty movie still

அதற்கு அவர் முன்கூட்டியே சொல்லணும்னு என்று சொன்னார். ஆனால், நான் முன்கூட்டியே சொல்லிட்டேன். பிறகு ராஜாவாவது ஏன் பாக்யராஜ் வரலை? என்று கேட்டு இருக்கனும். இந்த அசிஸ்டென்ட் பையன் அவர்கிட்ட என்ன சொன்னார் என்று தெரியவில்லை. அவரும் எனக்கு போன் பண்ணவில்லை. நானும் அப்படியே விட்டுட்டேன். பிறகு கங்கை அமரன் வந்து நீங்களும், ராஜா அண்ணணும் ஒண்ணா சேர்ந்து வேலை பார்க்கணும் என்று சொன்னார். அந்த நேரத்தில் நானும் அடுத்த படம் ‘ராசுக்குட்டி’ பண்ண ரெடியாக இருந்தேன். பிறகு நான் ஓகே அமர் என்று சொன்னேன். பின் இளையராஜாவும் ஓகே சொல்லி ‘ராசுக்குட்டி’ படத்துக்கு மியூசிக் பண்ணி கொடுத்தார். அங்க இருந்து தான் திரும்பவும் எங்கள் பயணம் ஸ்டார்ட் ஆனது என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement