பாரதி கண்ணம்மாவில் அடுத்த வெண்பா யார் தெரியுமா ? பரீனாவே வெளியிட்ட வீடியோ.

0
175475
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-34-822x1024.jpg

அதற்கு முக்கிய காரணமே மீம் கிரியேட்டர் தான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீரியலில் கண்ணம்மா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். கண்ணம்மா தொடர்ந்து நடந்து செல்வதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு வச்சி செய்து வந்தனர். இதற்கு முன்னாள் எப்படியோ தெரியவில்லை கண்ணம்மா நடக்க ஆரம்பித்ததிலிருந்து மீம்கள் குவிய இந்த சீரியலின் ரீச் வேற லெவலில் சென்றுது என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் பாருங்க : சார்பட்டாலா குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகையா இது – நிஜத்தில் இப்படி ஒரு கிளாமர் பேர்வழியா.

- Advertisement -

இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா. ஆரம்பத்தில் புது யுகம் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.மேலும், இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அழகு என்ற தொடரில் நடித்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி கொடுத்தது பாரதி கண்ணம்மா தொடர் தான்.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பரீனா கர்ப்பமாகி இருக்கிறார். பரினா கர்ப்பமாக இருப்பதால் இனி அவர் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு நடிக்க வர மாட்டாரா என்று ரசிகர்கள் கவலையில் இருந்தார்கள். மேலும், பலரும் இது குறித்துபரீனாவிடம் கேள்வி கேட்டு இருந்தனர். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பரினா. வெண்பா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்று நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். அது வேறு யாருமில்லை பரீனாதா. கண்டிப்பாக நான் அந்த சீரியலில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement