தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பாவனா.அதன் பின்னர் தீபாவளி, அசல், ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல மலையாலப் படங்களில் நடித்துள்ளார்.
கடந்த வருட துவக்கத்தில் பாவனாவை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த பிரச்சனை காரணமாக பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த கேஸ் தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது.
இதையும் படியுங்க : மறைந்த நடிகர் ரித்திஷின் அழகான குடும்பம் இது தான்.! அவரது குணமும் இது தான்.!
அதன் பின்னர், கடந்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி பாவனாவின் நீண்ட நாள் காதலன் நவீன் என்ற திரைப்பட தயாரிப்பாளருடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் ஒரு சில படங்களில் அவ்வப்போது தலை காண்பித்து வந்தார் பாவனா.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். மேலும் தற்போது தான் குழந்தையாக சிறுவயதில் இருந்த புகைப்படத்தையும், தற்பொழுது உள்ள புகைப்படத்தை ஒப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்