பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 10வது வாரத்தில் வெளியேறிய நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி பத்தாவது வாரம் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், கடந்த வாரம் ஏஞ்சல்-டெவீல் சுற்று நடைபெற்றது. எப்போதுமே இந்த டாஸ்க் வந்தாலே பிக் பாஸ் வீடே கலவர பூமியாக மாறி விடும். டெவீல் அணியில் இருப்பவர்கள் ஏஞ்சல் அணியில் இருப்பவர்களை கெட்டவர்களாக மாற்ற வேண்டும் என்பது தான் டாஸ்க்.
இதனால் சிலர் கொஞ்சம் எல்லையை மீறி மட்டமான வேலை எல்லாம் செய்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சி குறித்த தகவல் :
இந்த வாரம் தொழிலாளி முதலாளி டாஸ்க் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்கள் மத்தியில் கலவரமே வெடித்தது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இருந்தாலுமே ஆட்கள் அதிகமாக இருப்பதால் இனி வரும் வாரங்களில் டபுள் எவிக்ஷன் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் நடக்க இருப்பதாக கூறப்பட்டது.
நாமினேஷன் பட்டியல்:
இந்த வாரத்தின் நடுவே ஒரு நாளில் போட்டியாளர் ஒருவர் வெளியேற இருக்கிறார். அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷனில் தர்ஷிகா, சௌந்தர்யா, ஜாக்குலின், ராயன், பவித்ரா, அன்சிதா, விஷால், அருண் சத்யா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இதில் ஓட்டின் நிலவரப்படி ஜாக்கலின், சவுந்தர்யா, பவித்ரா, அருண், அன்ஷிதா ஆகியோர் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். இவர்களை அடுத்து சத்யா, தர்ஷிகா ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். இவர்கள் இருவரில் இருந்து ஒருவர் தான் மிட் வீக் எவிக்ஷனில் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷனில் நடக்கவே இல்லை.
வெளியேறிய நபர்:
இந்த நிலையில் இந்த வாரம் வெளியேற இருக்கும் நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த வாரம் வீகென்ட் எபிசோட் வந்த உடனேயே விஜய் சேதுபதி நாமினேஷன் குறித்து சொன்னவுடன் எல்லோருமே வாய் அடைத்துப் போனார்கள். இந்த வாரம் சத்யா தான் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறி இருக்கிறார். இதுவரை இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் எதுவுமே செய்யாமல் இருந்தது தான் பலருக்குமே ஆச்சரியம். இதை அடுத்து இன்னும் ஒரு எவிக்ஷன் இருக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.