‘என்ன வேணா பேச இது உங்க அப்பன் வீடு இல்லடி’ கைகலப்பு வரை சென்ற தர்ஷிகா – சௌந்தர்யா

0
170
- Advertisement -

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் சௌந்தர்யா-தர்ஷிகா இடையே நடந்து இருக்கும் சண்டை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி ஒன்பதாம் வாரம் தொடங்கி 59 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம் தொடங்கி விட்டது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பொம்மை டாஸ்க் நடைபெற்றிருந்தது. இதனால் பிக் பாஸ் வீடே கலவர பூமியாக இருந்தது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த பொம்மையை தேர்வு செய்து அதை டால் ஹவுசில் வைக்க வேண்டும். அதோடு அவர்கள் தங்களுடைய பொம்மைகளை தேர்வு செய்யவே கூடாது. அது மட்டும் இல்லாமல் தங்களுக்கு விருப்பமில்லாத பொம்மையை டால் ஹவுசில் சேர்க்க விடாமலும் தடுக்கலாம். இதனால் ஒவ்வொரு போட்டியாளர்களுமே வெறி கொண்டு விளையாடி இருந்தார்கள்.

பொம்மை டாஸ்க்:

இந்த டால் டாஸ்க்கில் ஜெஃப்ரி தான் வின்னர் ஆனார். இந்த வாரத்தினுடைய பெஸ்ட் பிளேயர் ஆக ஜெஃப்ரி, சாச்சனா தேர்வாகி இருந்தார்கள். பின் இந்த வாரம் ஒர்ஸ்ட் பிளேயர் ஆக ராணவ்- மந்திரி தேர்வாகி இருந்தார்கள். பின் கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று சிவகுமார் தான் வெளியேறி இருந்தார்.
மேலும், ஒன்பதாம் வாரத்திற்கான நாமினேஷனில் மஞ்சரி, முத்துக்குமார், சாச்சனா, ராணவ், ரஞ்சித், தர்ஷிகா, சௌந்தர்யா, ராயன், பவித்ரா, சத்யா, ஜாக்லின், ஆனந்தி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

angel-devil டாஸ்க்:

இந்நிலையில் இந்த வாரம் ஏஞ்சல்-டெவீல் சுற்று நடைபெற்றிருக்கிறது. எப்போதுமே இந்த டாஸ்க் வந்தாலே பிக் பாஸ் வீடே கலவர பூமியாக மாறி விடும். அந்த வகையில் இந்த எட்டாவது சீசனிலுமே இந்த டாஸ்கால் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இன்றைய எபிசோட்டில் தர்ஷிகா- ஜாக்குலின் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது கோபத்தில் தர்ஷிகா, என்ன வேணாமலும் பேச இது என்ன உங்க அப்பன் வீடா என்று ஜாக்லினை பார்த்து கேட்டிருக்கிறார்.

சௌந்தர்யா-தர்ஷிகா சண்டை:

ஆத்திரம் தாங்க முடியாத சௌந்தர்யா, தர்ஷிகாவிடம் சண்டைக்கு போயிருக்கிறார். மற்ற போட்டியாளர்கள் விலக்கியும் சௌந்தர்யா கொந்தளித்து இருக்கிறார். பிக் பாஸ் வீடே கலவரமாக இருக்கிறது. இந்த வாரம் நிகழ்ச்சி சுவாரசியமாக செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் நடைபெற்று இருக்கும் நாமினேஷனில் குறைவான வாக்குகளை தர்ஷிகா தான் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement