3 லட்சம் என்னிடம் இருந்து ஏமாத்திட்டாங்க- கண்ணீர் மல்க பிக் பாஸ் ஜூலி அளித்த பேட்டி(இது தான் காரணம்)

0
633
- Advertisement -

பிரபல நிறுவனத்திடம் 3 லட்சம் ரூபாய் ஏமாந்து விட்டேன் என்று ஜூலி கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இவர் முதல் சீசனில் சினிமா பற்றி எந்த ஒரு தெளிவும் இல்லாமல் கலந்து கொண்டவர். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜூலி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தாலும் பல விமர்சனங்களை சந்தித்து இருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயர் எடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர்.

-விளம்பரம்-

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக் கொண்டார் ஜூலி. அதற்கு காரணம், இவர் பிக் பாஸ் முதல் சீசனில் வீட்டுக்குள் நடந்த கலவரத்தால் மாத்தி மாத்தி பொய் பேசி இருந்தது தான். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார்.

- Advertisement -

செவிலியர் தொழிலை விட்ட ஜூலி :

இருந்தாலும் ஜூலி குறித்து பலரும் பயங்கரமாக திட்டி தீர்த்து மீம்ஸ் போட்டு கலாய்த்து இருந்தார்கள். ஆனால், ஜூலி மனம் தளராமல் தைரியமாக பல மேடைகளில் கலந்துகொண்டு பேசியிருந்தார். இதிலிருந்து மீண்டு வர இவர் மிகவும் கஷ்டப்பட்டு இருந்தார் என்றே சொல்லலாம். பின் சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜூலி கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருடைய இமேஜை அப்படியே சுக்குநூறாக உடைத்து தன்னுடைய நேர்மையான முகத்தை காட்டி மக்களின் மனதை கவர்ந்து இறுதி வாரம் வரை வந்து இருந்தார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியில் ஜூலி வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஜூலி போட்டியில் வெற்றி அடையவில்லை என்றாலும் ரசிகர்கள் பலரின் மனதில் வெற்றி அடைந்து விட்டார் என்றே சொல்லலாம். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி ஒரு சில நிகழ்ச்சிகளுக்கும் மட்டுமே கலந்துகொண்டார். அதே போல ஜீ தமிழ் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருந்தார். அது போக, ஜூலி சொந்தமாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஜூலி:

இந்நிலையில் பிரபல நிறுவனத்திடம் 3 லட்சம் ரூபாய் ஏமாந்து விட்டேன் என்று ஜூலி கூறி இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. ஜூலி அவர்கள் சமீபத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அதில் அவர், லண்டனில் நர்ஸ் வேலைக்காக மும்பை ஏஜென்சி இடம் 3 லட்ச ரூபாய் பணம் கட்டிருந்தேன். அந்த பணமும் நான் சிருக சிருக நர்ஸ் வேலை செய்ததன் மூலம் சேர்த்து வைத்தது. அதை தான் நான் மும்பை ஏஜென்சி இடம் லண்டனில் வேலை செய்வதற்காக கட்டி வைத்தேன். அங்கு வேலை செல்வதற்காக செய்த வேலையும் விட்டுவிட்டு லண்டனுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தேன்.

ஜூலியை ஏமாற்றிய நிறுவனம்:

அப்போது நான் பணம் கட்டிய மும்பை ஏஜென்சி நிறுவனம் என்னை ஏமாற்றி விட்ட தகவல் வந்தது. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்போ பஸ் ஸ்டாண்டில் நடுரோட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். பின் என்னுடைய தந்தையிடம் ஃபோன் செய்து நாம் ஏமாந்துட்டோம் என்று சொன்னவுடன் அவர் பணம் காசு எப்ப வேணாலும் சம்பாதிக்கலாம். நீ வந்துவிடுமா வீட்டுக்கு என்று சொன்னார். அந்த வார்த்தை தான் என்னுடைய வாழ்க்கைக்கு பலமாக இருந்தது. நான் இந்த அளவிற்கு முன்னேறி இருப்பதற்கு காரணம் என்னுடைய குடும்பத்தின் சப்போர்ட் தான் என்று கூறியிருக்கிறார்.

Advertisement