பிக் பாஸ் 8 சீசனில் உறுதி செய்யப்பட்டுள்ள மூன்று போட்டியாளர்கள் குறித்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வரலாற்று வருகிறது. இந்திய அளவில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பி இருந்தார்கள். அதற்குப் பிறகுதான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பழமொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை ஏழு சீசன் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கு துணையாக நின்று இருக்கிறது. பலரின் வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம்தான். இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.
கமல் விலகல்:
இந்நிலையில் கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து சிம்பு அல்லது ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இறுதியாக நடிகர் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கமிட் ஆகி உள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் சேனல் தரப்பில் இருந்து வெளியிடவில்லை.
பிக் பாஸ் சீசன் 8:
இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் வேலைகளும் செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக சினிமா பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், பிரபல யூட்யூபர்கள் என எல்லா தரப்பில் இருந்தும் சில பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். அந்த வகையில் ரியாஸ் கான், அமலா ஷாஜி, ரோபோ சங்கர், பாடகி கல்பனா, பப்லு ப்ரித்திவிராஜ், நடிகர் அஸ்வின் என்று சம்பத்தில் பல பெயர்கள் சோசியல் மீடியாவில் அடிபட்டு வந்தது.
முதல் போட்டியாளர்:
சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து பிரபலமாகிய நடிகர் அருண் தேர்வாகியுள்ளதாக கூறப்பட்டது. இவரிடம் முதல் கட்டமாக சேனல் தரப்பில் இருந்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. மேலும், இவரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அர்ச்சனாவும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது அர்ச்சனாவின் ரெக்கமென்டேஷனில் தான் அருளுக்கு பிக் பாஸ் 8 வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த இரண்டு போட்டியாளர்கள்:
அதை தொடர்ந்து தற்போது வந்திருக்கும் தகவலின் படி, பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்திருந்த பரீனாவும், பிரபல யூடுயூபர் டிடிஎப் வாசனின் காதலி ஜோயாவும் தேர்வாகியுள்ளதாக தெரிகிறது. ஜோயா தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று, சமீபத்தில் தான் எலிமினேட் ஆகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களிடமும் சேனல் தரப்பில் இருந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறார்களாம். எனவே, வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.