ரியாலிட்டி ஷோவில் பிகில் பாடல் வரிகளை சரியாக பாடிய போட்டியாளரை குறை சொல்லி தன் இஷ்டத்திற்கு பாடிய நடுவர் – வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
542
punitha
- Advertisement -

பிக் ஸ்டேஜ் தமிழ் எனும் ரியாலிட்டி பாடல் நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி புதிய உள்ளூர் திறமையாளர்களை வளர்க்கவும், பல இளைஞர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி கடந்த மார்ச் 12ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் பிக் ஸ்டேஜ் தமிழ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை அஹிலா (ராகா) மற்றும் விக்கி ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் 11 போட்டியாளர்களை களம் இறக்கி இருக்கிறார்கள். இந்த போட்டியாளர்களுக்கு இடையேயான கடுமையான போட்டி ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை டாக்டர் பர்ன் மற்றும் புனிதா ராஜா, முன்னாள் ராகாவின் அறிவிப்பாளர் மற்றும் கலைஞர், ராம் மற்றும் இசையமைப்பாளர், ஷமேஷன் மணி மாறன் உட்பட உள்ளூர் இசைத் துறையைச் சேர்ந்த நடுவர்கள் பலர் இருக்கின்றன. இந்த நிகழ்ச்சி 8 வாரம் நிகழ்த்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு 30,000, இரண்டாம் பரிசு 15,000, ஆறுதல் பரிசாக ஒவ்வொருவருக்கும் 5000 கொடுக்கப்படுகிறது.

- Advertisement -

போட்டியாளர் பாடிய பாடல் குறித்து புனிதா :

இப்படி வித்தியாசமான கான்செப்ட்டில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் நடுவர் புனிதா ராஜாவை குறித்து சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனம் எழுந்து வருகிறது. அது என்னவென்றால், நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர் விஜயின் பிகில் படத்தில் வரும் வெறித்தனம் என்ற பாடலை பாடியிருந்தார். அப்போது நடுவர் புனிதா கூறி இருப்பது, நான் ஆரம்பத்திலிருந்து எப்படியாவது நீங்கள் இந்த பாடலை சரியாக பாடுவீர்கள் என்று கவனித்தேன். ஆனால், இல்லை என்று சொல்லி அந்த பாடலை அவர் பாடினார்.

வரிகளை தவறாக பாடிய நடுவர் :

புனிதா லிரிக்ஸ் தவறாக தான் பாடியிருந்தார். ஆனால், அவர் சொல்லும்போது நீங்கள் நோட் சரியாக பாடவில்லை என்று தான் சொல்லி இருக்கிறார். இதை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் புனிதாவை கடுமையாக விமர்சித்துப் பேசி இருக்கிறார்கள். அதில் சிலர், குப்பைகள் எல்லாம் நடுவர்களாக வைத்தால் இப்படித்தான் இருக்கும். பாடலை உங்களுக்கு பாட தெரியவில்லை போட்டியாளர்களை குறை சொல்கிறீர்களா? இந்த மாதிரி இருப்பவர்கள் மத்தியில் திறமையாளர்கள் எப்படி வளர முடியும்? என்று பயங்கரமாக தாக்கி பேசி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

புனிதா கொடுத்த விளக்கம் :

இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் புனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இப்போது சோஷியல் மீடியாவில் அதிகமாக எண்ணை குறித்து பேசப்பட்டு வருவது அனைவருக்குமே தெரியும். இந்த நிகழ்ச்சியை எல்லோரும் பார்ப்பது குறித்து ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் ஒரே ஒரு விஷயத்தை தெளிவு படுத்துவதற்காக தான் இந்த வீடியோவை பதிவிட்டேன். எல்லோராலும் லிரிக்ஸ் சரியாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாது. அது எனக்கும் தெரியும். நானும் லிரிக்ஸ் தப்பாக பாடியிருக்கிறேன். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

தவறாக புரிந்துகொண்டார்கள் :

ஆனால், நான் அவர் லிரிக்ஸ் தப்பாகப் பாடினார் என்று கூறவில்லை. நோட் தப்பாக இருக்கிறது என்று மட்டும் தான் கூறினேன். அதை சரியாக பார்த்தால் நன்றாக இருக்கும். அதை சில பேர் தவறாக புரிந்து கொண்டு பேசியிருக்கிறார்கள். பரவாயில்லை. நான் நோட் சரியில்லை என்று மட்டும் தான் சொன்னேன் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement